<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>பொன்ஸ்பக்கங்கள்</title>
	<atom:link href="http://poonspakkangkal.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://poonspakkangkal.wordpress.com</link>
	<description>எனக்கென ஒரு இடம்</description>
	<lastBuildDate>Sat, 28 Apr 2007 09:16:00 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='poonspakkangkal.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>பொன்ஸ்பக்கங்கள்</title>
		<link>http://poonspakkangkal.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://poonspakkangkal.wordpress.com/osd.xml" title="பொன்ஸ்பக்கங்கள்" />
	<atom:link rel='hub' href='http://poonspakkangkal.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>பதிவு மேம்பாட்டுக் கருவி பீட்டா அல்லது வெட்டியாய்ச் சுட்டவை</title>
		<link>http://poonspakkangkal.wordpress.com/2007/04/28/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf/</link>
		<comments>http://poonspakkangkal.wordpress.com/2007/04/28/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Sat, 28 Apr 2007 09:16:00 +0000</pubDate>
		<dc:creator>பொன்ஸ்</dc:creator>
				<category><![CDATA[நுட்பம்]]></category>
		<category><![CDATA[பீட்டா]]></category>

		<guid isPermaLink="false">http://poonspakkangkal.wordpress.com/2007/04/28/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf/</guid>
		<description><![CDATA[புரட்சிப் புரோக்ராம்மர் குழலி, கருவிப்பட்டை சேர்க்கும் பக்கத்தை வெளியிட்டதிலிருந்தே, அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். களத்துமேட்டில் நிறைய வேலை இருப்பதாக சொல்லியே நழுவிக் கொண்டிருந்ததால், நானே கொஞ்சநஞ்ச ஜாவா அறிவைச் சோதிச்சு பார்க்கிறதுன்னு இறங்கியாச்சு. கணினியில் எனக்குப் பிடிக்காத மொழி என்றால் அது ஜாவா ஸ்க்ரிப்டிங் தான். HTML, ஜாவா ஸ்க்ரிப்டிங், சுலபமாக இருப்பதாலோ, அல்லது தனக்கு என்ன பிரச்சனை என்று தானே சொல்லத் தெரியாத குழந்தையாகவே இருப்பதாலோ, நான் முறையாக [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=poonspakkangkal.wordpress.com&amp;blog=534143&amp;post=260&amp;subd=poonspakkangkal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>புரட்சிப் புரோக்ராம்மர் குழலி, <a href="http://kuzhali.blogspot.com/2007/03/blog-post.html">கருவிப்பட்டை சேர்க்கும் </a>பக்கத்தை வெளியிட்டதிலிருந்தே, அதில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். களத்துமேட்டில் நிறைய வேலை இருப்பதாக சொல்லியே நழுவிக் கொண்டிருந்ததால், நானே கொஞ்சநஞ்ச ஜாவா அறிவைச் சோதிச்சு பார்க்கிறதுன்னு இறங்கியாச்சு.</p>
<p>கணினியில் எனக்குப் பிடிக்காத மொழி என்றால் அது ஜாவா ஸ்க்ரிப்டிங் தான். HTML, ஜாவா ஸ்க்ரிப்டிங், சுலபமாக இருப்பதாலோ, அல்லது தனக்கு என்ன பிரச்சனை என்று தானே சொல்லத் தெரியாத குழந்தையாகவே இருப்பதாலோ, நான் முறையாக கற்காத மொழி என்பதாலோ, சுத்தமாக பிடிக்காது. இப்ப குழலி புண்ணியத்தில் அந்தக் கொடுமையையும் எழுதிப் பார்த்தாச்சு..</p>
<p>குழலியின் <a href="http://kuzhali.co.nr">பழைய பக்கத்திலிருந்து</a> நிரலி எடுத்து மேம்படுத்தி இருப்பது தான். மேம்பாடு என்றால், அதிலாவது ஏதாவது புதுசா செய்திருக்கிறேனோ என்று நினைத்துக் கொள்பவர்களுக்கு: அப்படியெல்லாம் புதிதாக ஒன்றுமில்லை. எல்லாம் சுட்ட பழங்கள் தான்</p>
<p>ஜெகத் எழுதி இருந்த நேரமும் நாளும் தமிழில் காட்டும் <a href="http://kaiman-alavu.blogspot.com/2007/01/blog-post_31.html">தமிழைசர் நிரலியை </a> என் பதிவுக்காக இடும் போதே கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருந்தது. முதலில் ஒன்றிரண்டை விட்டுவிட்டு, அப்புறம் சரி செய்து, என்று இரண்டு மூன்று முறை வார்ப்புருவை திருத்த வேண்டியதாகிவிட்டது. அதனால், இந்த தமிழ்ப்படுத்தும் நிரலியையும் குழலியின் கருவிப்பட்டை மேம்பாட்டுப் பக்க நிரலியில் சேர்த்துப் <a href="http://poorna.rajaraman.googlepages.com/home">புதுப் பக்கம் ஒன்றை </a> உருவாக்கி இருக்கிறேன். </p>
<p>தமிழ்மணம் கருவிப்பட்டை சேர்த்தல், பழைய ப்ளாக்கர் பதிவுகளிலிருந்து வந்த ஒருங்குறிப் பின்னூட்டங்களைச் சரியாக்குதல், புது ப்ளாக்கரில் நாளும் நேரமும் தமிழில் காட்டுதல் &#8211; இவை மட்டுமே இன்று இந்தக் கருவியில் செய்யக் கூடியவை.</p>
<p><strong>மேலும் செய்ய எண்ணி இருப்பவை</strong>:<br />1. தேன்கூட்டின் பின்னூட்ட திரட்டி நிரலியைச் சேர்த்தல்<br />2. தன்னுடைய பதிவுகளில் தானே இடும் பின்னூட்டங்களை வேறு நிறத்தில் காட்டுதல் (author comment highlighting &#8211; என் பதிவில் வருவது போல்)<br />3. முந்தைய இடுகை, அடுத்த இடுகை போன்ற ஆங்கில சுட்டிகளைத் தமிழாக்குதல்<br />4. தீபாவின் நிரலி மூலம் யாஹூ சிரிப்பான்களைப் பதிவில் காட்டுதல்.</p>
<p>இவை தவிர, தற்போது இந்தப் <a href="http://poorna.rajaraman.googlepages.com/home">பதிவு மேம்பாட்டுக் கருவியில் </a>எனக்குத் தெரிந்த ஒரு பிரச்சனையும் இருக்கிறது:<br />   ஏற்கனவே தமிழ்மணக் கருவிப்பட்டை உடைய வார்ப்புருவை உள்ளிட்டு (தவறுதலாக)மீண்டும் கருவிப்பட்டை இடச் சொன்னால், இரண்டாம் முறையாகவும் பட்டையை இட்டுவிடுகிறது இந்தப் பக்கம். மனித தலையீடில்லாமல், மேம்படுத்த வேண்டிய பகுதி ஏற்கனவே வார்ப்புருவில் இருக்கிறதா இல்லையா என்று கண்டறிந்து தானே செய்யக் கூடிய வகையில் இதைக் கொஞ்சம் மாற்றவும் வேண்டும். </p>
<p>இது தவிர வேறு பிரச்சனைகளும் இருக்கிறதா என்று நண்பர்கள்/பயனர்கள் கண்டறிந்து சொன்னல் உதவியாக இருக்கும். உங்களுக்குத் தேவை என்று தோன்றும் வேறு மேம்பாட்டுச் சேவைகள் இருப்பின் அதையும் சொல்லுங்கள். இவற்றைத் தெரிந்து கொள்ளவும், முதல் அறிமுகமாகக் கொடுக்கவுமே இந்த பீட்டா(சோதனை) பதிவு.</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/poonspakkangkal.wordpress.com/260/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/poonspakkangkal.wordpress.com/260/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/poonspakkangkal.wordpress.com/260/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/poonspakkangkal.wordpress.com/260/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/poonspakkangkal.wordpress.com/260/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/poonspakkangkal.wordpress.com/260/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/poonspakkangkal.wordpress.com/260/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/poonspakkangkal.wordpress.com/260/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/poonspakkangkal.wordpress.com/260/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/poonspakkangkal.wordpress.com/260/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/poonspakkangkal.wordpress.com/260/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/poonspakkangkal.wordpress.com/260/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/poonspakkangkal.wordpress.com/260/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/poonspakkangkal.wordpress.com/260/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/poonspakkangkal.wordpress.com/260/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/poonspakkangkal.wordpress.com/260/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=poonspakkangkal.wordpress.com&amp;blog=534143&amp;post=260&amp;subd=poonspakkangkal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://poonspakkangkal.wordpress.com/2007/04/28/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>11</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1d87fd4312cf6e975e23f6e3a7d42ee5?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">பொன்ஸ்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சென்னை வலைபதிவர் சந்திப்பு 22-ஏப்ரல்</title>
		<link>http://poonspakkangkal.wordpress.com/2007/04/23/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/</link>
		<comments>http://poonspakkangkal.wordpress.com/2007/04/23/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 23 Apr 2007 12:19:00 +0000</pubDate>
		<dc:creator>பொன்ஸ்</dc:creator>
				<category><![CDATA[சந்திப்பு]]></category>
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>

		<guid isPermaLink="false">http://poonspakkangkal.wordpress.com/2007/04/23/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/</guid>
		<description><![CDATA[சரியாக மூன்று முப்பதுக்கு நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்ததால், எப்படியும் தொடங்கி இருக்க மாட்டார்கள் என்று பாலபாரதிக்கு போன் அடித்துக் கேட்டால், &#8220;தொடங்கியாச்சும்மா.. எல்லாரும் வந்துட்டாங்க.. நீங்க வரலையா?&#8221; என்றார். &#8220;இந்த வெயிலிலா?&#8221; என்று கேட்க நினைத்து பயந்து கேட்காமல் அவசர அவசரமாகக் கிளம்பினேன். சாகரன் தேன்கூடு சாகரனுக்கு நினைவஞ்சலிகளுடன் தொடங்கியது பதிவர் சந்திப்பு. தொடர்ந்து சென்னபட்டினம் குழு சார்பாக சாகரன் நினைவுமலர் வெளியிடப்பட்டது. மா.சிவகுமார் மலரை வெளியிட, சாகரனின் உற்ற தோழர் பாலராஜன் கீதா பெற்றுக் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=poonspakkangkal.wordpress.com&amp;blog=534143&amp;post=259&amp;subd=poonspakkangkal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>சரியாக மூன்று முப்பதுக்கு நல்ல வெயில் அடித்துக் கொண்டிருந்ததால், எப்படியும் தொடங்கி இருக்க மாட்டார்கள் என்று பாலபாரதிக்கு போன் அடித்துக் கேட்டால், &#8220;தொடங்கியாச்சும்மா.. எல்லாரும் வந்துட்டாங்க.. நீங்க வரலையா?&#8221; என்றார்.</p>
<p>&#8220;இந்த வெயிலிலா?&#8221; என்று கேட்க நினைத்து பயந்து கேட்காமல் அவசர அவசரமாகக் கிளம்பினேன்.</p>
<p><span style="font-size:130%;"><strong>சாகரன்</strong> </span><br />தேன்கூடு சாகரனுக்கு நினைவஞ்சலிகளுடன் தொடங்கியது பதிவர் சந்திப்பு. தொடர்ந்து <strong>சென்னபட்டினம் குழு</strong> சார்பாக சாகரன் நினைவுமலர் வெளியிடப்பட்டது. மா.சிவகுமார் மலரை வெளியிட, சாகரனின் உற்ற தோழர் பாலராஜன் கீதா பெற்றுக் கொண்டார்.</p>
<p>அடுத்து, சிறில் அலெக்ஸ் தேன்கூடு பெட்டகம் பற்றிப் பேசினார். இதெல்லாம் முடிந்த பின்னால் தான் நான் பூங்காவுக்குப் போய்ச் சேர்ந்ததே! <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> </p>
<p><strong><span style="font-size:130%;">மாற்று! &#8211; சிறில்</span> </strong><br />அடுத்தபடியாக பாஸ்டன் பாலாவை &#8220;ஸ்னாப் ஜட்ஜ் ஏன்? எதற்கு?? எப்படி???&#8221; என்று கேள்விகளால் துளைத்தோம். மாற்று! பற்றியும் பேச்சு வந்தது. மடை திறந்த வெள்ளம் போல் பேசினார் சிறில். பதிவர் சந்திப்பு நிகழ்ந்த மூன்று மணிநேரமும் முழு உற்சாகத்தோடு சோர்வடையாமல் எந்த தலைப்பானாலும் பேசியது சிறில் அலெக்ஸ் மட்டும் தான்:)</p>
<p>&#8220;மாற்று! தளத்தை இன்னும் சம்பிரதாயமாக, விளம்பரப்படுத்தி நிறுவவில்லை&#8221; என்பது சிறிலின் எண்ணம். &#8220;மாற்று! தளத்தில் பக்கங்களில், இன்னும் அதிக பதிவுகளைக் காட்சிப்படுத்தலாம்&#8221; என்றும் சொன்னார்.</p>
<p><strong><span style="font-size:130%;">வலைபதிவர் உதவிப்பக்கம் &#8211; விக்கி</span></strong><br />அடுத்தபடியாக, &#8220;தமிழ்வலைபதிவர் உதவிப்பக்கத்தின்&#8221; செயல்பாடுகள் குறித்து விக்கி பேசினார். &#8220;நாமாக விதவிதமாகப் பதிவுகள் இடுவதை விட, பயனர்களின் கேள்விகள் என்று ஏதும் இருந்தால், அவற்றுக்குப் பதில் சொல்லும் விதமான இடுகைகள் இடலாம்&#8221; என்று சிறில் சொன்னார். &#8220;பதிவர் உதவிக்குழுவைச் சேர்ந்த எல்லாருக்கும் வசதியான ஒரு வாரத்தைத் தேர்ந்தெடுத்து பதிவர் குறைகேட்கும் வாரம் போல எல்லாருக்கும் உள்ள கேள்விகளைச் சேகரிக்கலாம்&#8221; என்றேன். எவ்வளவு தூரம் சாத்தியம் என்று பேச வேண்டும்.</p>
<p><span style="font-size:130%;"><strong>ப்ளாக் கேம்ப் : வலைபதிவுக்கும் சமூகத்துக்கும் ஒரு பாலம் &#8211; ஓசை செல்லா </strong><br /></span>ஓசை செல்லா கோவையில் தான் நடத்த திட்டமிட்டிருக்கும் ப்ளாக் கேம்ப் பற்றிப் பேசினார். &#8220;வலைபதிவுகளை எழுதுபவர்களே படிப்பவர்கள் என்ற நிலையை மாற்றி நம்மைத் தவிர்த்த சமுகமும் வலைபதிவுகளைப் படிக்கத் தொடங்கும் பொழுது தான் இவற்றிற்கு ஒரு பயன் இருக்கும். அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாக கோவையில் நடத்தப் போகும் ப்ளாக் கேம்ப் வழிவகுக்கும்&#8221; என்றார் செல்லா.</p>
<p>அடுத்து மாற்று!, கூகிள் ரீடர் சேவைகள் குறித்து நான் பேசுவதாக இருந்தது. ஏற்கனவே சிறில் பேசியதைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள வசதியான தலைப்பாகையால், ரொம்ப சுலபமாகப் போய்விட்டது.</p>
<p><strong><span style="font-size:130%;">வலைபதிவுகள் சிந்தனைக் கிட்டங்கியாக வேண்டும்: தருமி</span></strong><br />பாதிப் பேச்சுக்களிடையிலேயே புகைக்கப் போன சிலர்(பலர்?) மீண்டு வந்தபின், தருமி தன்னுடைய வலைபதிவு அனுபவங்களைப் பேசினார். பல்வேறு பின்னணிகளிலிருந்து வந்திருக்கும் இளைஞர்கள் இத்தனை விஷயஞானம் உள்ளவர்களாகவும், சமூகப் பொறுப்புள்ளவர்களாகவும் இருப்பதை வியந்த தருமி, வலைப்பதிவுகளில் உள்ள சிந்தனை ஒரு சிந்தனைக் கிட்டங்கியாக(thinktank), மாற வேண்டும் என்று விரும்பியதாகவும் பல்வேறு விதமான சிந்தனைகள் கலக்கும் இவ்விடத்தில் அதுபோன்ற ஒருமித்த கிட்டங்கி என்பது சாத்தியமில்லை என்று இப்போது உணருவதாகவும் கூறிய போது, வெவ்வேறு எண்ணங்களுடைய வெவ்வேறு சிந்தனைகளின் வெளிப்பாடான இந்த வலைப்பதிவுலகமே சிறந்த கிட்டங்கி என்ற எதிர்க்கருத்து பலரிடமிருந்து வந்தது. ஒரே கருத்தை முன்வைத்து சிந்தனைக் கிட்டங்கி என்று அழைப்பதை விட, பல்வேறு கருத்துக்களும் இருக்குமிடத்தில் வந்து படிப்பவர்கள், எது சரி, எது தவறு என்பதைத் தத்தம் அனுபவங்கள், கல்வி, அறிவு சார்ந்து சிந்தித்து சீர்தூக்கி முடிவெடுப்பதே சரியானதொரு சிந்தனைக் கிட்டங்கியின் செயலாக இருக்கும் என்பதே என்னுடைய கருத்தும்.</p>
<p>அடுத்தபடியாக தருமி சொல்லிய ஒருவிசயம் அமுகவின் கொள்கைக்கு விரோதமாக இருந்தாலும், பதிந்தே தீரவேண்டும்.. &#8220;அனானி முன்னேற்றக் கழகம்னு எல்லாம் சொல்றீங்க, ஆனா, ஒரு பதிவுல கருத்து சொல்லணும்னா, ஏதாவது ஒரு புனைப்பேரோடவாவது வந்து சொல்லுங்க..&#8221; என்ற பேராசிரியரின் கருத்துக்கு அமுக தலைகள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும், எல்லாரும் அறிந்த புனைப்பெயரில் சொல்லாமல் ஏதோ அந்தச் சந்தர்ப்பத்துக்குத் தோன்றிய ஒரு புனைப்பெயரில் வருவதற்கும், அனானிமஸாக வருவதற்கும் அதிக வித்தியாசம் ஏதும் இல்லையே தருமி? எப்படி இருந்தால் என்ன?</p>
<p><span style="font-size:130%;"><strong>மாணவர்களை வலைபதிவுக்குள் அழைத்துவர வேண்டும் </strong><br /></span>தருமியின் சிந்தனைக் கிட்டங்கி யோசனையை ஒட்டி, அப்படிச் சமூகத்துக்கும் சென்று சேர வேண்டுமானால், மாணவர்களை வலைபதிவுக்கு அழைத்து வருவதே வழி என்று விவாதம் திசை திரும்பியது. ஏற்கனவே சிலர் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருப்பதாக பாலபாரதி சொன்னார். &#8220;நிறைய பேருக்குத் தமிழில் எழுதலாம் என்பதும், அது இத்தனை சுலபம் என்பதும் தெரியவே இல்லை&#8221; என்று ஆதங்கப்பட்ட செல்லா, &#8220;கோவையில், ஒவ்வொரு இணைய மையத்தின் வாயிலிலும், தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப்பதிவுகள், சுரதாவின் எழுத்துரு மாற்றி இவற்றின் உரலை ஒரே ஒரு நாள் ஒட்டியதற்கே ஹிட்ஸ் எகிறியது. இது போன்ற விவரங்கள் அடங்கிய போஸ்டர்களைச் சுலபமாக வடிவமைத்து அவரவர் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள இணைய மையங்களில் ஒட்டி வைக்கலாம். இணைய மையத்தின் பொறுப்பாளர்களுக்கும் இந்த சைட்களை அறிமுகப்படுத்தினாலே பலருக்கும் அவர்களே பரப்பிவிடுவார்கள்&#8221; என்றும் சொன்னார்.</p>
<p>மாணவர்களைத் தமிழ்ப் பதிவுலகுக்கு அழைத்துவரும் அளவுக்கு பதிவுலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா? என்று அடுத்த தலைப்புக்குச் சென்றது விவாதம். &#8220;என்னுடைய பதிவெல்லாம் மாணவர்கள் படிக்கிற சமாச்சாரமே இல்லை!&#8221; என்று சுய வாக்குமூலம் கொடுத்தார் செல்லா. அதையொட்டி சிவக்குமாருக்கும், செல்லாவுக்கும் சின்ன விவாதம் நடந்தது.</p>
<p><strong><span style="font-size:130%;">சிறுவர் திரட்டி- அனானி</span></strong><br />&#8220;படிக்கும் மாணவர்கள் தமிழ்ப்பதிவுகளுக்கு வரவேண்டும் என்று எங்கோ இருப்பவர்களைப் பற்றிப் பேசுகிறோமே, நம்வீட்டுப் பிள்ளைகளை முதலில் அழைத்துவருவோமே!&#8221; என்று நான் கேட்ட போது, &#8220;சிறுவர்கள் படிக்கும் அளவுக்கு முதலில் வலைபதிவுகளை ஆரோக்கியமாக்குவோம், அதன்பின் அவர்களை அழைத்துவருவது நல்லது&#8221; என்றார் ஓகை. &#8220;சிறுவர்களுக்கு என்று தனித் திரட்டி உருவாக்கி, அதை ஓரளவுக்காவது கண்காணித்து வந்தாலொழிய சிறார்களைப் பதிவுலகுக்கு அழைத்து வருவது என்பது எட்டாக்கனி தான்&#8221; என்று சொன்னது யார் என்று எனக்கு நினைவில்லை <img src='http://s2.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  ஆனால், சிறுவர் திரட்டி, அதன் கண்காணிப்புக் குழு என்பது மிகவும் ஆரோக்கியமான யோசனையாக தோன்றியது.</p>
<p><span style="font-size:130%;"><strong>எ-கலப்பை குறுந்தகடு இலவச விநியோகம் &#8211; ஓகை நடராஜன்</strong><br /></span>இதற்கிடையே தமிழ் எழுதுகருவிகளைப் பற்றிப் பேசும் போது எகலப்பை போன்ற இலவச கருவிகள் இருப்பது தெரியாமல் விலை கொடுத்து தமிழ்க் கணிமைக்கான மென்பொருளை வாங்குபவர்கள் பற்றிப் பேச்சு எழுந்தது. &#8220;எ-கலப்பை போன்ற மென்பொருள் பற்றிய விழிப்புணர்வேற்படுத்த அடுத்த புத்தக கண்காட்சியில் ஏன் இதனை சின்னச் சின்னக் குறுந்தகடுகளாகச் செய்து இலவசமாகத் தரக் கூடாது?&#8221; என்று கேள்வி எழுப்பினார் பாலபாரதி. அப்படிச் செய்தால், அவற்றிற்கான செலவைப் பகிர்ந்து கொள்வதாக உடனுக்குடன் வாக்களித்தார் ஓகை நடராஜன். மக்கள் தொலைக்காட்சியின் செய்திகளின் போது இது போன்ற செய்திகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று வாக்களித்தார் கௌதம்.</p>
<p>தினமலர், தினத்தந்தி, விகடன், குமுதம் போன்ற தமிழ் ஊடகங்கள் இன்னமும் யூனித் தமிழுக்கு மாறாமல் தனக்கென ஒவ்வொரு விதமான எழுத்துருக்களை வைத்திருப்பதைக் குறித்து இராம.கி ஐயா வருந்தினார். &#8220;எப்படியும், நம்மைப் போன்ற நிறைய பதிவர்கள் யூனித்தமிழில் எழுதத் தொடங்கி அதில் பல இணைய பக்கங்கள் வந்துவிட்டால் இவர்களும் மாறிவிடுவார்கள்&#8221; என்று கருத்து தெரிவித்தார் மாஹிர்.</p>
<p>இதற்கிடையே மக்கள் தொலைகாட்சியின் ஒளிப்பதிவாளர்களும், குங்குமம் பத்திரிக்கையாளர்களும் வந்து படமெடுத்தார்கள். இன்று காலை 7:30 மணி செய்திகளில் இந்த விவரம் ஒளிபரப்பப்பட்டது.</p>
<p>தருமி பேசி முடித்தவுடன், கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சிதறி, தனித்தனியான கலந்துரையாடல்களாகிவிட்டது. சிந்தாநதியின் தமிழ்நாடு டாக் பட்டிமன்றங்களில் பங்கு பெற்று, வெற்றி பெற்ற இனியன், நந்தா மற்றும் எனக்கும் வரவேண்டிய பரிசுகளை அளித்தார்கள். தொடர்ந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டவுடன் கூட்டம் பல்வேறு பிரிவுகளாகக் கலைந்தது.</p>
<p><em>தேநீர் சாப்பிடலாம் என்று சொல்லி பின்புற வாயில் வழியாக அழைத்துச் சென்று ஒரு கடையும் இல்லாமல் வெட்டியாக நேரம் செலவழிக்க வைத்த பாலாபாய்க்கு, வழக்கம் போல கண்டனங்களுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.</em></p>
<p><strong><span style="font-size:130%;">பங்கேற்றவர்கள் விவரங்கள்: (என்னுடைய மொக்கை குறிப்புகளோடு <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' />  )</span><br /></strong>1. <a href="http://unkalnanban.blogspot.com">உங்கள் நண்பன் சரவணன்</a> : இந்த முறை சந்திப்பு கொஞ்சம் புரிகிறாற் போல இருந்தது என்று கடைசியாக வாக்களித்தார். <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> <br />2. <a href="http://masivakumar.blogspot.com/">மா. சிவகுமார்</a><br />3. <a href="http://dharumi.blogspot.com/">தருமி</a> &#8211; &#8220;தாத்தா முறுக்கெல்லாம் சாப்பிட முடியுமா?&#8221; என்று கிண்டல் செய்ததில், சிவக்குமாரின் முறுக்கையும் மிடுக்காகக் கடித்து தூள் பண்ணிவிட்டார்..<br />4. <a href="http://vinaiooki.blogspot.com/">வினையூக்கி</a> &#8211; எப்போதோ வாக்கு கொடுத்த ஐநூறு ரூபாய் நன்கொடை என்னிடம் கொடுக்காததனினால் பல மாதங்களாக சரியாக தூங்காமலிருந்தவர், கடைசியாக நேற்று நன்றாக தூங்கி இருப்பார் என்று நினைக்கிறேன்.<br />5. <a href="http://oagaisblog.blogspot.com/">ஓகை நடராஜன்</a> &#8211; நான் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல.. <a href="http://madippakkam.blogspot.com/2007/04/blog-post_23.html">லக்கி சொல்லிட்டாரு</a> <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> <br />6. <a href="http://icarusprakash.wordpress.com/">ஐகாரஸ் பிரகாஷ்</a><br />7. <a href="http://etamil.blogspot.com/">பாஸ்டன் பாலா</a><br />8. லியோ சுரேஷ்: இன்னும் வலைபதிவு தொடங்கவில்லை என்றார். ஆனால், நிறைய விசயம் வைத்திருக்கிறார். சீக்கிரமே எழுதுவதாக வாக்களித்திருக்கிறார்.<br />9. <a href="http://vicky.in/dhandora">விக்கி</a><br />10. <a href="http://theyn.blogspot.com/">சிறில் அலெக்ஸ்</a>: மொதல்லயே சொல்லிட்டேன். சோர்வடையாமல் பேசி முழு உற்சாகத்தோடு நிறைய கருத்துக்கள் பகிர்ந்து கொண்டது சிறில் தான். மக்கள் தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டி உட்பட பல விசயங்களை எந்த முன்னேற்பாடும் இல்லாமல் அழகாக சொல்லிக் கொண்டே இருந்தார்.<br />11. பாலராஜன் கீதா : இரண்டு நாட்களாக, &#8220;பதிவர் சந்திப்புக்கு வாங்க, நினைவு மலர் நீங்க தான் வாங்கிக்கிடணும்&#8221; என்று டார்ச்சர் பண்ணிக் கொண்டே இருந்தேன் <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> . கடைசியில் நான் லேட்..<br />12. <a href="http://valavu.blogspot.com/">இராம.கி</a> ஐயா<br />13. <a href="http://madippakkam.blogspot.com/index.html">லக்கிலுக்</a>: செக்கச் செவேலென்று ஒரு டீசர்ட் போட்டுவந்து தருமியின் கருப்பு டீசர்ட் பக்கத்தில் நின்று அவ்வப்போது கட்சிப் பாசம் காட்டிக் கொண்டே இருந்தார்.<br />14. <a href="http://nandhakumaran.blogspot.com/index.html">நந்தா</a>: நாமக்கல்லார் வலைபதிவு அப்ரண்டைஸ்களுக்காக நடத்திய வகுப்புகளில் கலந்து கொண்டவர்களுள் இவரும் ஒருவர்.<br />15. <a href="http://truetamilans.blogspot.com/index.html">உண்மைத் தமிழன்</a>: நான் ஒண்ணும் சொல்றதா இல்லை.. <a href="http://sugunadiwakar.blogspot.com/2007/04/blog-post_23.html">சுகுணா திவாகர் இன்னும் தெளிவாக எழுதிவிட்டார்</a> <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> <br />16. <a href="http://mp-sundar.blogspot.com/">சுந்தர்</a>: &#8220;நினைவு மலர்&#8221; என்று கொடுத்ததைச் சரியாக பயன்படுத்தியவர் இவர் ஒருவர் தான். தனக்கு நினைவில் இருக்கத் தேவையான எல்லார் மின் முகவரியும்/தொலைபேசி எண்ணும் வாங்கி அந்தப் புத்தகத்தில் எழுதிவைத்துக் கொண்டார் <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> <br />17. <a href="http://chella.info/webgypsy">ஓசை செல்லா</a> : என்னத்தச் சொல்ல, என்னைப் பாத்து, என்ன்ன்னைப் பாத்து நிறைய மொக்கைன்னுட்டாரு.. செல்லா, நீங்க எங்க தல பாலாவோட போனில் பேசினதே இல்லையா? <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> <br />18. <a href="http://priyan4u.blogspot.com/">ப்ரியன்</a>: இப்போதும் கூட நிறையபேர், ப்ரியனையும், விக்கியையும் குழப்பிக் கொள்கிறார்கள். சந்திப்பில் கூட யாரோ இதே போல் அவரிடம் வந்து இவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.<br />19. <a href="http://malekind.blogspot.com/">சு.க்ருபாசங்கர்</a>: மோகன் தாஸுடன் சீரியஸாக கணினி தொழிற்நுட்பங்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். இரும்படிக்கும் இடத்தில் கொஞ்சம் நேரம் உட்கார்ந்துவிட்டு, தலைக்கு எட்டாமல் போகவும் பறந்துவிட்டேன்.<br />20. <a href="http://imohandoss.blogspot.com/index.html">மோகன்தாஸ்</a>: அக்கா மீது ஏன் இத்தனை பாசம் என்று எனக்கு இப்பதான் புரியுது <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' />  தினமும் உங்கள் கூந்தலை அள்ளி முடிந்து விடும் அக்கா மீது அந்தப் பாசம் இல்லாம போகுமா <img src='http://s2.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> )) [உடனே பெண்கள் மட்டும் தான் கூந்தல் வளர்க்கணுமா என்று வந்துடாதீங்க, இது ச்ச்சும்மா விளையாட்டுக்குத் தான் <img src='http://s2.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> ) ]<br />21. <a href="http://gragavan.blogspot.com">ஜி.ராகவன்</a> : சீக்கிரமே கிளம்பிவிட்டார், ஜி.ரா வந்ததுக்கே நன்றி சொல்லணும்..<br />22. <a href="http://muthuvintamil.blogspot.com">முத்து தமிழினி</a><br />23. <a href="http://pakutharivu.blogspot.com/">பகுத்தறிவு </a><br />24. <a href="http://poonspakkangkal.blogspot.com/">பொன்ஸ்</a><br />25. <a href="http://wethepeopleindia.blogspot.com/">We the People</a><br />26. <a href="http://saralil.blogspot.com/">ஜே கே</a> : சிபியின் நண்பர். இந்தச் சந்திப்பில் பாகசவில் சேர்ந்த கன்னிச்சாமி <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> <br />27. <a href="http://pithatralgal.blogspot.com/">நாமக்கல் சிபி</a> : புதுப் புது பதிவர்களாக பாகசவில் சேர்த்துக் கொண்டே இருக்கிறார்..<br />28. <a href="http://karuthukkal.blogspot.com">விஜயராஜ்</a><br />29. <a href="http://beaplus.blogspot.com">மாரிக்கனி</a><br />30. <a href="http://techtamil.blogspot.com">மாஹிர்</a> : கூகிளிலும் கூட்டாக சாட் செய்வதற்கு ஒரு புதுக் கருவியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் தமிழூற்று மாஹிர்.<br />31. <a href="http://naveenprakash.blogspot.com">நவீன் பிரகாஷ்</a><br />32. தமிழ்வாய்ஸ்<br />33. <a href="http://maraboorjc.blogspot.com/">&#8216;மரபூர்&#8217; ஜெய. சந்திரசேகரன்</a><br />34. <a href="http://yosinga.blogspot.com/">யோசிப்பவர்</a>: &#8220;ஹிந்தியில் நேரடியாக வலைபதிவு செய்யும் தொழில்நுட்பத்தை ப்ளாக்கர் அறிமுகப் படுத்தியிருப்பதை ஏன் தமிழிலும் நாம் செய்ய முடியாது?&#8221; என்று கேட்டுக் கொண்டிருந்தார். அத்தனை ஆழமான நுட்ப அறிவு இல்லாததால், க்ருபாசங்கரைக் கைகாட்டிவிட்டேன் <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> <br />35. <a href="http://nilaraseegan.blogspot.com/">நிலாரசிகன்</a><br />36. <a href="http://puliyamaram.blogspot.com">தங்கவேல்</a>: அந்த ஹெல்மெட்டை விடவே மாட்டீங்களா? பூங்கா மண்ணிலும் பாதுகாக்கணுமா? <br />37. <a href="http://sugunadiwakar.blogspot.com">மிதக்கும்வெளி</a>: நடை பாதையில் வாக்கிக் கொண்டிருந்தவர்களைக் கவனித்த அளவுக்கு இவருக்குக் கூட்டம் ரசிக்கவில்லை. சுற்றுப்பாதையில் நடந்து கொண்டிருந்த கருப்பு டிசர்ட் பெண்(இதுலயும் கருப்பா? <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' />  ) இல்லாமல் இருந்திருந்தால், சீக்கிரமே எஸ்கேப் ஆகி இருப்பார் என்று தோன்றியது <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> <br />38. <a href="http://kuttapusky.blogspot.com">செந்தில்</a><br />39. <a href="http://sudarazi.blogspot.com/">WeeBee</a><br />40. <a href="http://gpost.blogspot.com">ஜி. கௌதம்</a>: தொலைக்காட்சிக் குழுவை அழைத்து வந்ததோடல்லாமல், சந்திப்பின் போது &#8220;பெண்ணே நீ&#8221; பத்திரிக்கை விநியோகத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார் கௌதம்.<br />41. <a href="http://madavillagam.blogspot.com/">வடுவூர் குமார்</a>: திடீர் விருந்தினராக வந்து அசத்தியவர் குமார். சிங்கையிலிருந்து விடுமுறைக்காக வந்திருந்தாராம்.<br />42. <a href="http://charlesantony.blogspot.com/">சார்லஸ்</a>: புதிய பதிவர். அன்புடன், முத்தமிழ்க் குழுமங்களில் ஏற்கனவே சுறுசுறுப்பாக செயல்பட்டு வருபவர்.<br />43. <a href="http://balabharathi.blogspot.com/">யெஸ். பாலபாரதி</a><br />இது தவிர, மரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த <a href="http://idlyvadai.blogspot.com/2007/04/fir.html">இட்லிவடை </a> <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> , மற்றும் அவ்வப்போது நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கைதட்டி ரசித்துக் கொண்டிருந்த [நிறுத்த வைத்த <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> ] அனானிக் கூட்டம் ஒன்று, மொக்கை தாங்காமல் துண்டை விரித்து எங்கள் கூட்டத்திற்கு மிகச் சமீபத்தில் படுத்து உறங்கிய அனானி ஒருவர்.</p>
<p><strong>சந்திப்பின் பொழுது (என்னிடம்) தொலைபேசியவர்கள்:</strong><br />1. சந்திப்புக்கு வராமல் எஸ்கேப்பான செந்தழல் ரவி<br />2. 22ஆம் தேதி பதிவர் சந்திப்பு பற்றிய முதல் பதிவு போட்ட அபி அப்பா<br />3. அமுக அவுஸ்திரேலிய கிளையை முழுக் குத்தகை எடுத்து நடத்தும் பொட்டீக்கடை சத்யா</p>
<p>நிச்சயம் வந்துவிடுவதாக வெள்ளிக்கிழமை கூட உறுதி கூறிய சிவஞானம்ஜி, சிந்தாநதியின் பரிசை வாங்கிக் கொள்ள வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இனியன், தாயகம் திரும்பிய கப்பி பய, முதல் பதிவர் சந்திப்பு என்று குதித்துக் கொண்டிருந்த பிரின்ஸ், &#8220;அடுத்த சந்திப்பில் சாகரன் பற்றிப் பேசுவீங்கன்னா, நான் கண்டிப்பா வருவேன்&#8221; என்று வெகு நாட்களுக்கு முன்பே சொல்லிக் கொண்டிருந்த தேவ்,  பெங்களூரில் இருந்து வருவதாக சொல்லி இருந்த மகேஸ், இவர்கள் எல்லாம், கடைசி நிமிடம் வரை வந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.. ஆனால் <img src='http://s0.wp.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> ((( </p>
<p align="center"><a href="http://poorna.rajaraman.googlepages.com/22apr15.jpg"><img src="http://poorna.rajaraman.googlepages.com/22apr15.jpg" /></a></p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/poonspakkangkal.wordpress.com/259/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/poonspakkangkal.wordpress.com/259/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/poonspakkangkal.wordpress.com/259/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/poonspakkangkal.wordpress.com/259/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/poonspakkangkal.wordpress.com/259/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/poonspakkangkal.wordpress.com/259/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/poonspakkangkal.wordpress.com/259/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/poonspakkangkal.wordpress.com/259/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/poonspakkangkal.wordpress.com/259/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/poonspakkangkal.wordpress.com/259/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/poonspakkangkal.wordpress.com/259/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/poonspakkangkal.wordpress.com/259/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/poonspakkangkal.wordpress.com/259/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/poonspakkangkal.wordpress.com/259/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/poonspakkangkal.wordpress.com/259/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/poonspakkangkal.wordpress.com/259/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=poonspakkangkal.wordpress.com&amp;blog=534143&amp;post=259&amp;subd=poonspakkangkal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://poonspakkangkal.wordpress.com/2007/04/23/%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>34</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1d87fd4312cf6e975e23f6e3a7d42ee5?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">பொன்ஸ்</media:title>
		</media:content>

		<media:content url="http://poorna.rajaraman.googlepages.com/22apr15.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>ACTS OF FAITH &#8211; நம்பிக்கைகளின் செயல்கள்.</title>
		<link>http://poonspakkangkal.wordpress.com/2007/04/16/acts-of-faith-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/</link>
		<comments>http://poonspakkangkal.wordpress.com/2007/04/16/acts-of-faith-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Mon, 16 Apr 2007 08:38:00 +0000</pubDate>
		<dc:creator>பொன்ஸ்</dc:creator>
				<category><![CDATA[புத்தகம்]]></category>
		<category><![CDATA[விமர்சனம்]]></category>

		<guid isPermaLink="false">http://poonspakkangkal.wordpress.com/2007/04/16/acts-of-faith-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/</guid>
		<description><![CDATA[எரிக் சேகல்(Erich Segal) எனக்கு அறிமுகமானது &#8220;லவ் ஸ்டோரி&#8221;(Love Story) புத்தகம் மூலம். அழகான, ஆற்றொழுக்கமான நடையுடனும் தெளிவான கதையோட்டத்துடனும் போகும் அந்தக் கதை கிட்டத்தட்ட நம் தமிழ் சினிமா மாதிரி தான். ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் வாசித்த புத்தகம் அது. உண்மையைச் சொல்வதானால், அதில் குறிப்பிடப்பட்டிருந்த கல்லூரிகளின் பெயர்கள் தொடங்கி, பல விசயங்கள் எனக்குப் புதிது. ஆனாலும், அந்தப் புத்தகம் நான் ரசித்துப் படித்த கதைகளில் ஒன்றாகிவிட்டது. லவ் ஸ்டோரியும் சரி, [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=poonspakkangkal.wordpress.com&amp;blog=534143&amp;post=258&amp;subd=poonspakkangkal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>எரிக் சேகல்(Erich Segal) எனக்கு அறிமுகமானது <strong>&#8220;லவ் ஸ்டோரி&#8221;(Love Story)</strong> புத்தகம் மூலம். அழகான, ஆற்றொழுக்கமான நடையுடனும் தெளிவான கதையோட்டத்துடனும் போகும் அந்தக் கதை கிட்டத்தட்ட நம் தமிழ் சினிமா மாதிரி தான். ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் வாசித்த புத்தகம் அது. உண்மையைச் சொல்வதானால், அதில் குறிப்பிடப்பட்டிருந்த கல்லூரிகளின் பெயர்கள் தொடங்கி, பல விசயங்கள் எனக்குப் புதிது. ஆனாலும், அந்தப் புத்தகம் நான் ரசித்துப் படித்த கதைகளில் ஒன்றாகிவிட்டது. லவ் ஸ்டோரியும் சரி, அதன் பின் படித்த <strong>டாக்டர்ஸும்(Doctors)</strong> சரி, எரிக் சேகல் ஒரு சிறந்த நாவலாசிரியர் என்பதை முன்னிறுத்துவன. விறுவிறுப்பு குறையாத அவரின் ஆளுமை இந்த &#8220;Acts of Faith&#8221;திலும் காணக் கிடைப்பது கண்கூடு.</p>
<p>&#8220;Acts of Faith&#8221; மூன்று வெவ்வேறு வகையான மனிதர்களின் கதை மட்டுமல்ல, இரண்டு மதங்களைப் பற்றிய கதையும் கூட. உலக மதங்களைப் பற்றி அதிகம் படித்தறியாத எனக்கு, இந்த நாவல் இன்னும் பல புதிய விசயங்களைப் பற்றி ஆராயவும் அறியவும் ஆரம்பமாக இருந்தது என்றால் மிகையில்லை.</p>
<p>
<p align="center"><img src="http://images.amazon.com/images/P/0553560700.01._SCMZZZZZZZ_.jpg" /></p>
<p><strong>டேனியல்</strong>(Daniel), அவன் தமக்கை <strong>டேபோரா</strong>(Deborah), அவளுடைய காதலன் <strong>டிமோத்தி</strong>(Timothy), என்ற மூவரைச் சுற்றியது இந்தக் கதை.</p>
<p>தந்தையின் வெளியூர்ப் பயணத்தின் போது, மனநலம் குன்றிப் போன தாய்க்கு முறையற்ற உறவில் பிறந்த குழந்தை டிமோத்தி. தாயும் தந்தையும் இல்லாமல், உறவினர் வீட்டில் ஏச்சு பேச்சுகளுக்கிடையில் வளரும் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு கிறித்துவன். பள்ளியில் அவனுடைய பக்தி, சிரத்தை, அறிவுக்கூர்மை இவற்றைக் காணும் பாதிரியார் ஒருவர், டிம்மையும் பாதிரியார் ஆக்கி கடவுள் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.</p>
<p>டெபோரா, டேனியல் இருவரும் யூதர்கள். இவர்களின் தந்தை ராவ் லூரியா யூத ராபி(Rabbi). நம் பூசாரிகளைப் போல் கடவுளுக்கும் பிற மனிதர்களுக்கும் பாலமாக இருக்கும் இந்த ராபிக்கள், கிறித்துவப் பாதிரியார்களைப் போல் அல்லாமல், இல்லறத்தில் ஈடுபட்டு நல்ல பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது அவர்களின் நெறியாகச் சொல்லப்படுகிறது. அதிலும் வாரிசுகளாக மகன்கள் அமைந்தால் அவர்களையும் ராபியாக்கிப் பார்ப்பதே அவர்களின் தர்மம்.</p>
<p>நமது ராபி, ராவ் லூரியாவுக்கு முதல் மனைவியின் மூலம் இரண்டு மகள்களும், அடுத்த மனைவியின் மூலம் டேபோரா, டேனியல் இருவரும் பிறக்கிறார்கள். தவமிருந்து பெற்ற கடைசி மகனான டேனியலின் பிறப்பிலிருந்து கதை துவங்குகிறது.</p>
<p>யூத வழக்கத்தில் சப்பாத்(Sabbath) எனப்படும் வெள்ளி மாலை தொடங்கி, சனிக்கிழமை மதியம் வரை நீளும், பொழுதுகள் புண்ணியகாலமாக கருதப்படுகிறது. இந்த சப்பாத் வேளையில் தன் மனைவியை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வது ஒவ்வொரு ஆணுக்கும் கடமையாகக் கூறப்படுகிறது. நல்ல மகனைப் பெற்றுக் கொடுக்கவல்ல மனைவியை திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வது நல்ல யூதனின் கடமை என்கிற அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சப்பாத் பொழுதுகளில் வீட்டில் விளக்கணைப்பதற்கு யூதரல்லாத நபரைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் அவர்களுடைய தருமம். இந்த வகையில் ராபி ராவ் லூரியா வீட்டில் சப்பாத் கடமை செய்ய வருகிறான் டிம்.</p>
<p>மெல்ல மெல்ல டிம்முக்கும் டேபோராவுக்குமிடையில் அருமையான காதல் பூக்கிறது. யூதரல்லாத ஆணுடன் பேசுவதற்குக் கூட மறுக்கப்படும் டேபோராவும், யூதப் பெண்கள் எல்லாம் மயக்கும் மோகினிகள் என்று போதிக்கப்பட்டும் அவளிடம் பேசத் துடிக்கும் டிம்மும் சேர்ந்திருக்கும் ஒரு நேரத்தில் ராபி லூரியா பார்த்துவிட, இங்கே வருகிறது முதல் பிரிவு.</p>
<p>டிம் வேலையை விட்டு நீக்கப்படுகிறான். டேபோரா &#8216;புண்ணிய பூமி&#8217;யான ஜெருசேலத்தில், தந்தையின் நண்பர் வீட்டில் வேலைக்காரியாக தங்கி மிச்ச கல்வியை முடித்துக் கொண்டு, கிறித்துவனைக் காதலித்த பாவத்துக்கு விமோசனம் தேட விதிக்கப்படுகிறாள். ஓரிரு வருடங்களில் இந்தச் சிறையிலிருந்து தப்பிக்கும் டேபோரா, இஸ்ரேலின் கலிலீ நகரில் ஒரு கிப்புட்ஸ்(kibbutz) என்னும் கூட்டுறவுப் பண்ணையில் தஞ்சம் புகுகிறாள்.</p>
<p>இதற்கிடையில் டிமோத்தியும், டேனியலும் தத்தம் மதக் கல்வியைத் தொடங்குகிறார்கள். டிமோத்தி சிறந்த மாணவனாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாதிரியார் படிப்பிற்காக ரோமுக்கு அனுப்பப்படுகிறான். டேனியல், ஆரம்பத்தில் நன்கு படித்தாலும் தன் சகோதரிகளின் நிலை பற்றிய சில கேள்விகள் அவனைப் புரட்டிப் போட்டதில், கடவுள் சேவைக்கான கல்வியை விட்டு விலகி, பங்குசந்தையில் பணம் சேர்க்கத் தொடங்கிவிடுகிறான். ஆரம்பத்திலிருந்தே தன் சகோதரியின் காதலுக்கு விரோதம் பாராட்டாத டேனியல் மூலம் டேபோராவின் இருப்பிடம் அறிந்து டிமோத்தி அவளைச் சந்திக்க வருகிறான். ஒரே பார்வையில் இருவருமே காத்திருந்தது இந்தச் சந்திப்புக்காகத் தான் என்று புரிந்தாலும், டிமோத்தியின் ஆழ்மன விருப்பம் அவனுடைய மதச் சேவை தான் என்பதைப் புரிந்து டேபோரா அவனை ரோமுக்கு அனுப்பிவைக்கிறாள்.</p>
<p>நாள் செல்லச் செல்ல, டேபோரா தன் மதம் தொடர்பான கல்வி பெறுகிறாள். பழங்காலக் கட்டுக்கோப்பிலிருந்து வெளியேவந்து கொண்டிருக்கும் அமெரிக்க யூத சமூகத்தில் முதல் சில பெண் ராபிக்களில் ஒருவராகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறாள். டேபோரா மற்றும் டிம்மின் அன்பின் அடையாளமான அவர்களின் மகனையும் அழைத்துக் கொண்டு அவள் மீண்டும் தன் சொந்த வீட்டுக்கு வந்து சேர்கிறாள். டேனியலின் புறக்கணிப்பால் உடலும் மனமும் நலிந்து போன அவளின் தந்தை ராவ் லூரியா தன் தவற்றை உணர்ந்து டேபோராவையும் அவள் மகனையும் ஏற்றுக் கொள்கிறார்.</p>
<p>பாதிரியாருக்கான கல்வியை முழுமையாக முடித்துவிட்டு கடவுள் சேவைக்காக அதே ஊருக்கு வரும் டிம், ஒருவழியாக இந்தப் பணி தன் ஆன்மதேடல் நிறைவு பெற உதவவில்லை என்பதை உணர்ந்து டேபோராவுடன் வந்து சேர்வதில் கதை முடிகிறது. இதற்கிடையில் டேனியலும் தன் பாதை உணர்ந்து ராபியாகிறான்.</p>
<p>இருவேறு சமய நம்பிக்கைகளைக் கைகோர்த்துச் சொல்லும் இந்த நாவல், பெரும்பாலும் அமெரிக்க யூத சமூகத்தைப் பற்றியே பேசுகிறது. யூத பழக்க வழக்கங்கள், அவர்களின் நம்பிக்கைகள், சப்பாத் பற்றிய விவரங்கள் என்று எல்லாப் பக்கத்தையும் தொடுவது போலவே பாதிரியார் ஆவதற்குரிய சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆசாபாசங்கள் அறுத்த அந்த வாழ்க்கை என்று கிறித்துவ மதத்தின் கூறுகளையும் எடுத்துவைக்கிறது. அதே போல், ஜெருசேலம், ரோம், பிரேசில், ப்ரூக்லின், கலிலீயின் கிப்புட்ஸ் என்று கதை பயணிக்கும் ஒவ்வொரு நகரையும் துல்லியமாக விவரிக்கிறது.</p>
<p>நல்ல மகனைப் பெற்றுத் தரும் நல்ல மனைவியாக இருப்பதே உண்மையான யூதப் பெண்ணின் தர்மம் என்று நம்பும் ராபி ராவ் லூரியாவே தன் மகளைத் தன் ஆன்மிக வாரிசாக ஒப்புக் கொள்வதும், டேபோரா வாழும் கிப்புட்ஸின் கூட்டுறவு வாழ்க்கையும், டேனியல்-டேபோரா இவர்களுக்கிடையிலான நட்பு கலந்த சகோதர பாசமும் நான் ரசித்த பகுதிகள்.</p>
<p>ஒரு கட்டத்தில், டேனியலின் மாற்றாந்தாய் மகள் ஒருவருக்குப் பேய் பிடித்துவிடுவதாக செய்தி வருகிறது. டேனியல் தன் பேராசிரியருடன் வீட்டுக்குப் போகையில் அந்தப் பெண்ணைப் பிடித்திருக்கும் பேய் அவனின் மாற்றாந்தாயே எனவும், தன் தந்தை ராபி ராவ் லூரியாவையே இது கலங்கடித்துவிட்டதெனவும் அறிந்து அதிர்ந்து போகிறான். நம்மூர் போலவே பேயோட்டும் பூசாரிகள் மூலம் அவன் அக்கா துன்புறுத்தப்படும்போது, அவனுடன் வந்த பேராசிரியர் அவன் அப்பாவுடனும், அக்காவுடனும் தனித்தனியே பேசி பிரச்சனையை முடித்துவைக்கிறார். திரும்புகையில், அப்பாவின் முதல் மனைவி மூன்றாவது பிரசவத்தின் போது உயிர் துறந்ததற்கு எப்படி அப்பாவின் ஆண்வாரிசு வெறி காரணமாயிற்று என்பதையும், அது அக்காவின் ஆழ்மனதில் புகுந்து வெளிப்பட்டதே இந்தப் பேயாட்டம் என்றும் அறியும்போது டேனியலுக்கு, தன் முன்மாதிரியான வலிமையான அப்பழுக்கற்ற ராபி, ராவ் லூரியா என்ற பிம்பம் உடைந்து போகிறது. இந்த நிகழ்வுகளையும் அதை எழுதியிருக்கும் விதமும் ரசிக்கத்தக்கவை.</p>
<p>மதங்கள் வேறாக இருந்தாலும், மனங்கள் இணைந்தால், பாதிரியார் பற்றிய கல்வி பெற்ற கிறித்துவரும், ராபியாக வாழும் யூதரும் கூட ஒருவருக்கொருவர் வாழ்க்கைத்துணையாகியும் ஒரே பாதையில் பயணிக்கலாம் என்று சொல்லி முடிக்கிறார் எரிக் சேகல். ஒவ்வொரு நாவலையும் வெவ்வேறு கோணத்தில், வெவ்வேறு கருப்பொருளுடன் எழுதினாலும் புத்தகத்தைக் கீழே வைக்காமல் படிக்க வைக்கும் பாங்கு சேகலின் சிறப்பு.<br />
<blockquote>புத்தகம் : Acts of Faith<br />ஆசிரியர் : Erich Segal<br />வெளியிட்டோர் : <a onclick="return mugicPopWin(this,event);" oncontextmenu="mugicRightClick(this);" href="http://www.amazon.com/Acts-Faith-Erich-Segal/dp/0553560700/ref=pd_sim_b_4/103-6902608-6521408">Bantam Books </a><br />பதிப்பு : April 1992</p></blockquote>
<p><strong>குறிப்புகள்</strong>:<br />1. ஆங்கிலப் பெயர்களை நான் உச்சரித்திருக்கும் விதத்தில் தவறிருக்கலாம். அவற்றின் ஆங்கில உச்சரிப்பை அடைப்புக்குள் கொடுத்திருக்கிறேன். சரியான உச்சரிப்பைச் சொல்லித் தந்தால் மகிழ்வேன் <img src='http://s2.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> <br />2. உலக மதங்கள் பற்றிய என் புரிதல் மிகவும் குறைவு. இந்தப் புத்தகத்திலிருந்து நான் அறிந்து கொண்டவற்றை இங்கே எழுதி இருக்கிறேன். தவறான புரிந்தலால், தகவல் பிழை இருப்பின், அதைச் சுட்டிக் காட்டினால் சரிசெய்து கொள்ள உதவும்.</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/poonspakkangkal.wordpress.com/258/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/poonspakkangkal.wordpress.com/258/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/poonspakkangkal.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/poonspakkangkal.wordpress.com/258/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/poonspakkangkal.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/poonspakkangkal.wordpress.com/258/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/poonspakkangkal.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/poonspakkangkal.wordpress.com/258/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/poonspakkangkal.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/poonspakkangkal.wordpress.com/258/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/poonspakkangkal.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/poonspakkangkal.wordpress.com/258/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/poonspakkangkal.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/poonspakkangkal.wordpress.com/258/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/poonspakkangkal.wordpress.com/258/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/poonspakkangkal.wordpress.com/258/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=poonspakkangkal.wordpress.com&amp;blog=534143&amp;post=258&amp;subd=poonspakkangkal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://poonspakkangkal.wordpress.com/2007/04/16/acts-of-faith-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>13</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1d87fd4312cf6e975e23f6e3a7d42ee5?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">பொன்ஸ்</media:title>
		</media:content>

		<media:content url="http://images.amazon.com/images/P/0553560700.01._SCMZZZZZZZ_.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>பதிவர்கள் கவனிக்க: பின்னூட்டம் இனி இட மாட்டேன்</title>
		<link>http://poonspakkangkal.wordpress.com/2007/04/09/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/</link>
		<comments>http://poonspakkangkal.wordpress.com/2007/04/09/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/#comments</comments>
		<pubDate>Mon, 09 Apr 2007 09:34:00 +0000</pubDate>
		<dc:creator>பொன்ஸ்</dc:creator>
				<category><![CDATA[பதிவுகள்]]></category>
		<category><![CDATA[மகளிர் சக்தி]]></category>
		<category><![CDATA[வெட்டி]]></category>

		<guid isPermaLink="false">http://poonspakkangkal.wordpress.com/2007/04/09/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/</guid>
		<description><![CDATA[இப்போது முதல், இன்னும் சிலகாலத்துக்கேனும் பின்னூட்டங்கள் இடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். பொன்ஸ் என்ற பெயரில் புதிதாக ஒரு பதிவர் உருவாகி இருப்பதே இந்தத் திடீர் முடிவுக்குக் காரணம். தோழி ஒருவர் அழைத்து, &#8220;பொன்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய ப்ரோபைல் ரெடியாகிறதே, பார்த்தாயா?&#8221; என்று கேட்டபொழுது, &#8220;அப்படியா!&#8221; என்று வியக்கத்தான் முடிந்தது. பெண்களுக்கெதிரான வன்முறை மிகச் சுலபமாகக் கைவரக் கூடியது. அதிலும், நட்புரீதியாக கை நீட்டுபவர்களுடன் மிக இயல்பாகக் குலுக்கிவிடும் மனமுடைய என்னைப் பற்றி என்மூலமே திரட்டப்பட்ட [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=poonspakkangkal.wordpress.com&amp;blog=534143&amp;post=257&amp;subd=poonspakkangkal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>இப்போது முதல், இன்னும் சிலகாலத்துக்கேனும் பின்னூட்டங்கள் இடுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். பொன்ஸ் என்ற பெயரில் புதிதாக ஒரு பதிவர் உருவாகி இருப்பதே இந்தத் திடீர் முடிவுக்குக் காரணம்.</p>
<p>தோழி ஒருவர் அழைத்து, &#8220;பொன்ஸ் என்ற பெயரில் ஒரு புதிய ப்ரோபைல் ரெடியாகிறதே, பார்த்தாயா?&#8221; என்று கேட்டபொழுது, &#8220;அப்படியா!&#8221; என்று வியக்கத்தான் முடிந்தது.</p>
<p>பெண்களுக்கெதிரான வன்முறை மிகச் சுலபமாகக் கைவரக் கூடியது. அதிலும், நட்புரீதியாக கை நீட்டுபவர்களுடன் மிக இயல்பாகக் குலுக்கிவிடும் மனமுடைய என்னைப் பற்றி என்மூலமே திரட்டப்பட்ட தனிப்பட்ட தகவல்களுடனான பொய்யான ப்ரோபைல் உருவாக்க, இணையம் ஒரு வசதியான ஊடகம் என்பதில் சந்தேகம் என்ன இருக்க முடியும்..</p>
<p>சமீபத்தில், பெண்கள் தொடர்பான என்னுடைய இடுகைக்கு, எதிர்வினையான சில கும்மிப் பதிவுகளில், ஒரு அனானி இது போன்ற ஒரு ப்ரோபைலை உருவாக்கும் எண்ணத்தை வெளியிட்டிருந்தார். ஒருவழியாக இன்று அதை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்ட அவருக்கு என் வாழ்த்துக்கள். [விடுபட்டவை: <a href="http://balabharathi.blogspot.com/2007/01/blog-post_18.html">போலி மட்டுமா போலி</a> பதிவு ஏனோ திடீரென நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை ]</p>
<p>இந்த <strong>முகமிலி</strong>களுடன் மோதி, <em>தர்மயுத்தம்</em> செய்ய எனக்கு அவகாசம் இல்லாத காரணத்தாலும், இதைப் பற்றிக் கவலைப்படாமல் நான் பின்னூட்டமிட்டால் கூட, ஒவ்வொருமுறையும் சோதித்து வெளியிடும் சிரமத்தை நண்பர்களுக்குக் கொடுப்பதில் விருப்பமில்லாததாலும், பின்னூட்டங்கள் இடுவதை நிறுத்திக் கொள்வது ஆகச் சிறந்த வழியாகத் தெரிகிறது.</p>
<p>எனவே, இன்று முதல், பொன்ஸின் எழுத்துக்கள், <a href="http://www2.blogger.com/profile/17001672240431309855">இங்கு </a>பட்டியலில் உள்ள வலைப்பதிவுகளில் மட்டுமே வரும்.. மற்ற முகமிலிகளிடம், இரவல் முகத்துடன் வருபவர்களிடமும் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.</p>
<p><strong>குறிப்பு</strong>:<br />1. இரவல் முகத்துக்காரருக்கு லிங்க் கொடுத்துப் புகழ் சேர்க்க விருப்பமில்லை. அவகாசமும் அவசியமும் இருப்பவர்கள் தேடிக் கண்டு கொள்ளலாம் <img src='http://s2.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> <br />2. தனிமடல்கள், தொலைபேசியில் பேசுபவர்கள், இந்த விசயம் குறித்து தயவு செய்து பேச வேண்டாம். வரப் போகும் பதிவர் சந்திப்பு தொடங்கி நாம் பேச எத்தனையோ ஆக்கப் பூர்வமான விசயங்கள் இருக்கின்றன தானே..</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/poonspakkangkal.wordpress.com/257/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/poonspakkangkal.wordpress.com/257/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/poonspakkangkal.wordpress.com/257/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/poonspakkangkal.wordpress.com/257/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/poonspakkangkal.wordpress.com/257/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/poonspakkangkal.wordpress.com/257/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/poonspakkangkal.wordpress.com/257/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/poonspakkangkal.wordpress.com/257/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/poonspakkangkal.wordpress.com/257/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/poonspakkangkal.wordpress.com/257/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/poonspakkangkal.wordpress.com/257/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/poonspakkangkal.wordpress.com/257/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/poonspakkangkal.wordpress.com/257/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/poonspakkangkal.wordpress.com/257/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/poonspakkangkal.wordpress.com/257/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/poonspakkangkal.wordpress.com/257/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=poonspakkangkal.wordpress.com&amp;blog=534143&amp;post=257&amp;subd=poonspakkangkal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://poonspakkangkal.wordpress.com/2007/04/09/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/feed/</wfw:commentRss>
		<slash:comments>63</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1d87fd4312cf6e975e23f6e3a7d42ee5?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">பொன்ஸ்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஆமாமாம், நானும் ஒரு கிறுக்கு தான்&#8230;</title>
		<link>http://poonspakkangkal.wordpress.com/2007/03/31/%e0%ae%86%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95/</link>
		<comments>http://poonspakkangkal.wordpress.com/2007/03/31/%e0%ae%86%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95/#comments</comments>
		<pubDate>Sat, 31 Mar 2007 13:33:00 +0000</pubDate>
		<dc:creator>பொன்ஸ்</dc:creator>
				<category><![CDATA[பதிவுகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு பொன்ஸ்]]></category>
		<category><![CDATA[வெட்டி]]></category>

		<guid isPermaLink="false">http://poonspakkangkal.wordpress.com/2007/03/31/%e0%ae%86%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95/</guid>
		<description><![CDATA[கிறுக்குத்தனங்கள், விபரீத குணங்கள், விசித்திர பழக்கங்கள் இல்லாத மனிதர்களே இல்லை என்று தோன்றுகிறது, சமீபகால வியர்டு பதிவுகள் பார்த்து. என்னுடைய கிறுக்குத்தனங்களை எழுதச் சொல்லிக் கேட்ட அஞ்சா நெஞ்சர்களின் லிஸ்ட் இங்கே: யோசிப்பவர் முத்துலட்சுமி முத்துகுமரன் திரு முதலில் அத்தனை ஆர்வம் இல்லாமல் தான் இருந்தது, ஆனால், எப்படியாவது யாழ்ப் பட்டியலில் சேர்ந்து விடுவது என்ற முடிவோடு, ஒரு உந்துதலோடு எழுத ஆரம்பித்திருக்கிறேன் இன்று 1. புத்தகம் வாசிப்பது: வலைப்பதிவர் அனைவருக்கும் ஒரு பொதுவான குணமாக தெரிகிறது. [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=poonspakkangkal.wordpress.com&amp;blog=534143&amp;post=256&amp;subd=poonspakkangkal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>கிறுக்குத்தனங்கள், விபரீத குணங்கள், விசித்திர பழக்கங்கள் இல்லாத மனிதர்களே இல்லை என்று தோன்றுகிறது, சமீபகால வியர்டு பதிவுகள் பார்த்து. என்னுடைய கிறுக்குத்தனங்களை எழுதச் சொல்லிக் கேட்ட அஞ்சா நெஞ்சர்களின் லிஸ்ட் இங்கே:</p>
<ul>
<li><a href="http://yosinga.blogspot.com/2007/03/blog-post_20.html">யோசிப்பவர்</a> </li>
<li><a href="http://sirumuyarchi.blogspot.com/2007/03/5.html">முத்துலட்சுமி</a> </li>
<li><a href="http://eenpaarvaiyil.blogspot.com/2007/03/blog-post_26.html">முத்துகுமரன்</a> </li>
<li><a href="http://aalamaram.blogspot.com/2007/03/blog-post_28.html">திரு</a>
</li>
</ul>
<p>முதலில் அத்தனை ஆர்வம் இல்லாமல் தான் இருந்தது, ஆனால், எப்படியாவது <a href="http://lldasu.blogspot.com/2007/03/blog-post_28.html">யாழ்ப் பட்டியலில்</a> சேர்ந்து விடுவது என்ற முடிவோடு, ஒரு உந்துதலோடு எழுத ஆரம்பித்திருக்கிறேன் இன்று <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> </p>
<p align="center"><img src="http://www.studentsoftheworld.info/sites/animals/img/3564_Elephant%20Wave.gif" /></p>
<p>1. <strong>புத்தகம் வாசிப்பது:</strong> வலைப்பதிவர் அனைவருக்கும் ஒரு பொதுவான குணமாக தெரிகிறது. அதிலும் சாப்பிட்டுக் கொண்டே வாசிப்பது இயல்பாகவே ஆகிவிட்டது. சிறுவயதில் என்னுடைய வாசிப்பிடங்கள் இருட்டானவையாக இருக்கும். பீரோக்களின் சந்துகளில், கட்டில் அடியில், அரிசி பீப்பாய் பின்புறம் என்று எளிதில் தேடிக் கண்டுபிடித்து யாரும் தொல்லை செய்யாத இடத்தில் ஒண்டிக் கொண்டு படிக்கப் பிடிக்கும். வளர்ந்த பின்னர், அதாவது இந்த இடங்களில் நுழைய வசதியில்லாமல் போன பின்னர், எல்லா நேரங்களிலும் என் கையில் புத்தகம் இருந்த நாட்கள் உண்டு. ஓடும் ரயிலில், பேருந்தில், எனக்கே இடமில்லாத ஷேர் ஆட்டோக்களில், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து போகையில், முன்பு வசித்த புறநகர் பகுதியில் சைக்கிள் மிதிக்கையில், என்று அசைந்து கொண்டே படிக்கப் பிடிக்கும். பாலை அடுப்பில் வைத்துக் கொண்டே புத்தகம் படித்து பலநாள் புதுமனை புகுவிழா நடத்தி இருக்கேனாக்கும்.</p>
<p>2. <strong>பேசுவது</strong>: கணினி, பூனை, நாய், செடி, கொடிகளுடன் பேசுபவர்கள் பற்றிப் படிக்கையில், &#8220;அட நான் கூட இப்படித் தானே!&#8221; என்று நினைத்துக் கொண்டேன். இவற்றுடன் கூட, எனக்கு நானே பேசிக் கொள்வது அடிக்கடி செய்யும் செயல். பொதுவாக வண்டி ஓட்டும் பொழுது, துணி துவைக்கையில், பாத்திரம் துலக்குகையில், யாருக்காவது காத்திருக்கையில் என்று தனியாக இருக்கும்பொழுது ஏதேனும் யோசித்துக் கொண்டே என்னை அறியாது பேசி விடுவேன். ஒருமுறை இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டே நான் வீராவேசமாக என்னுடன் சண்டை போட்டுப் பேசிக் கொண்டே போவதை நண்பனின் தாயார் பார்த்துவிட, அன்று முழுவதும் ஓட்டித் தள்ளிவிட்டார்கள். வேலையில் சேர்ந்த புதிதில் நான் கணினியுடன் பேசுவதைக் கேட்டு பக்கத்து காபின் நண்பர் வேறிடம் மாற்றிக் கேட்குமளவுக்குத் தொல்லை செய்திருக்கேன் <img src='http://s2.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> ).</p>
<p>3. <strong>வாகனம் ஓட்டுவது</strong>: ஆளில்லாத சாலையில், அது என்ன வண்டியாக இருந்தாலும், வண்டி எடுத்து தனியே ஓட்டிக் கொண்டே போக பிடிக்கும். சைக்கிள் ஓட்டிய காலங்களில் சென்னையின் புறநகரான மடிப்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி பகுதிகள் முழுக்கவும் இப்படிச் சுற்றி இருக்கிறேன். கூடியவரை புதுப்புது வழிகள் கண்டுபிடிப்பது வழக்கம். இப்போது கூட தினமும் ஒரே வழியில் பயணிப்பது அலுத்துப் போய் வெவ்வேறு வழிகள் கண்டுபிடித்துக் கொண்டே போவேன்.</p>
<p>4. <strong>கோபம்</strong>: ரொம்பவும் கலகலப்பானவள் தான், அதிகம் யார் மேலும் கோபம் வராதுதான். ஒருமுறை என் வண்டியில் மோதி விபத்துக்குள்ளாக்கிய ஆட்டோக்காரரைக் கூட அந்தக் கணம் திட்டத் தோன்றாத காந்தீயவாதிதான் <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> , ஆனால், சில சமயங்களில் எதற்கென்றே தெரியாமல் ஒரு அனாவசியக் கோபம் வந்துவிடும். வெறுப்பு, டிப்ரெஷன் என்றும் சொல்லலாம். அதுபோன்ற சமயத்தில் யாரிடமாவது பேச நேர்ந்தால் கத்தி கலாட்டா பண்ணிவிடுவேன். பல சமயங்களில் நெருங்கிய நண்பர்கள் தான் இத்தகைய கோபத்துக்கு ஆளாவர்கள். அப்புறம் கூப்பிட்டு வெகுநேரம் மன்னிப்பு கேட்பேன். ஆனால், கொட்டிய வார்த்தைகளை அள்ளவா முடியும்? இப்போதெல்லாம் இந்தக் காரணமற்ற கோபம் குறைந்திருப்பதாக நம்புகிறேன். நண்பர்களைத் தான் கேட்க வேண்டும், பாவம்.</p>
<p>5. <strong>அதீத ஆர்வம், அல்லது ஆர்வமின்மை.</strong> ஏதாவது ஒரு விசயத்தில் ஆர்வம் உண்டானால், ஒரே ஆர்வக் கோளாறாக இருப்பேன். ஆனால், திடீரென்று அந்த விருப்பம் விட்டுப் போய்விடும். அப்படியே ஒதுங்கிவிடுவேன். ஐந்து வயதில் அடம்பிடித்து கேரம் போர்டு வாங்கி விளையாடி, ஆறுவயதில் அந்த போர்டை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு பல்லாங்குழி விளையாடப் போய்விட்ட கிறுக்குத்தனத்தை இன்றும் என் அப்பா சொல்லிக் காட்டிக் கொண்டே இருப்பார். தையல், பின்னல் போடுவது, மொழி கற்பது, பாட்டு கற்பது, கலர்கலர் வளையல், காதணி சேர்ப்பது, சின்னச் சின்ன பென்சில் சேர்ப்பது, தபால்தலை சேகரிப்பு, சுட்டிவிகடன் பொம்மைகள் செய்வது என்று எல்லா பொழுதுபோக்குகளும் ஒருசில நாள் ஆசை தான். வாசிக்கும் பழக்கம் மட்டும் தான் இத்தனை நாள் தொடர்ந்திருக்கிறது. விந்தையான விசயம் அதுதான் என்று தோன்றுகிறது.</p>
<p>இன்னும் ஐந்து பேரைக் கூப்பிடும் எண்ணமெல்லாம் இல்லை. எல்லாரும் எழுதிவிட்டார்கள் போலத் தெரிகிறது. அதனால் இத்தோட ஜூட் <img src='http://s2.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/poonspakkangkal.wordpress.com/256/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/poonspakkangkal.wordpress.com/256/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/poonspakkangkal.wordpress.com/256/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/poonspakkangkal.wordpress.com/256/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/poonspakkangkal.wordpress.com/256/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/poonspakkangkal.wordpress.com/256/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/poonspakkangkal.wordpress.com/256/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/poonspakkangkal.wordpress.com/256/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/poonspakkangkal.wordpress.com/256/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/poonspakkangkal.wordpress.com/256/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/poonspakkangkal.wordpress.com/256/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/poonspakkangkal.wordpress.com/256/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/poonspakkangkal.wordpress.com/256/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/poonspakkangkal.wordpress.com/256/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/poonspakkangkal.wordpress.com/256/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/poonspakkangkal.wordpress.com/256/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=poonspakkangkal.wordpress.com&amp;blog=534143&amp;post=256&amp;subd=poonspakkangkal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://poonspakkangkal.wordpress.com/2007/03/31/%e0%ae%86%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95/feed/</wfw:commentRss>
		<slash:comments>33</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1d87fd4312cf6e975e23f6e3a7d42ee5?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">பொன்ஸ்</media:title>
		</media:content>

		<media:content url="http://www.studentsoftheworld.info/sites/animals/img/3564_Elephant%20Wave.gif" medium="image" />
	</item>
		<item>
		<title>தம்பிக்கு&#8230; (சிறுகதை)</title>
		<link>http://poonspakkangkal.wordpress.com/2007/03/29/%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/</link>
		<comments>http://poonspakkangkal.wordpress.com/2007/03/29/%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/#comments</comments>
		<pubDate>Thu, 29 Mar 2007 12:51:00 +0000</pubDate>
		<dc:creator>பொன்ஸ்</dc:creator>
				<category><![CDATA[சிறுகதை]]></category>
		<category><![CDATA[சிறுவர் பக்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://poonspakkangkal.wordpress.com/2007/03/29/%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/</guid>
		<description><![CDATA[&#8220;என்ன ரேங்க்டா?&#8221; என்றார் அப்பா, பாலு நீட்டிய பிராக்ரஸ் ரிப்போர்ட்டைக் கையில் வாங்கியபடியே. &#8220;ரெண்டாவதுப்பா&#8221; ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியுடன் சொன்னான் பாலு. &#8220;ம்ம்ம்.&#8221; என்று பதில் சொன்ன அப்பாவின் குரலில் அதிகம் சுரத்தே இல்லை. &#8220;ராமுவை விட ரெண்டு ரேங்க் முன்னால் எடுத்திருக்கேன்பா..&#8221; அவசர அவசரமாக பாலு சொல்லவும், அப்பா எந்தவித உணர்ச்சியுமில்லாமல் தலையாட்டினார். &#8220;சரி சரி, உள்ளே வந்து கைகால் கழுவிகிட்டு பலகாரம் சாப்பிடுப்பா&#8221; என்று அம்மா அன்போடு அழைக்கவும் பாலு சோர்வு பொங்க உள்ளே [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=poonspakkangkal.wordpress.com&amp;blog=534143&amp;post=254&amp;subd=poonspakkangkal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div align="left">&#8220;என்ன ரேங்க்டா?&#8221; என்றார் அப்பா, பாலு நீட்டிய பிராக்ரஸ் ரிப்போர்ட்டைக் கையில் வாங்கியபடியே.</p>
<p>&#8220;ரெண்டாவதுப்பா&#8221; ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியுடன் சொன்னான் பாலு.</p>
<p>&#8220;ம்ம்ம்.&#8221; என்று பதில் சொன்ன அப்பாவின் குரலில் அதிகம் சுரத்தே இல்லை.</p>
<p>&#8220;ராமுவை விட ரெண்டு ரேங்க் முன்னால் எடுத்திருக்கேன்பா..&#8221; அவசர அவசரமாக பாலு சொல்லவும், அப்பா எந்தவித உணர்ச்சியுமில்லாமல் தலையாட்டினார்.</p>
<p>&#8220;சரி சரி, உள்ளே வந்து கைகால் கழுவிகிட்டு பலகாரம் சாப்பிடுப்பா&#8221; என்று அம்மா அன்போடு அழைக்கவும் பாலு சோர்வு பொங்க உள்ளே போனான்.</p>
<p>&#8220;இன்னைக்கும் இட்லி தானா? அதுக்கு ஒரு சட்னியாவது செஞ்சி வைக்கிறியா நீ!&#8221; என்று குற்றப்பத்திரிக்கையோடு பலகாரத்தை முடித்துக் கொண்டு வெளியே வரவும் ராமு அப்பாவுடன் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.</p>
<p>&#8220;நாலாவது ரேங்க் எடுத்திருக்கியாமே நீ?! வெரி குட்&#8221; என்று சொல்லிக் கொண்டிருந்தார் அப்பா.</p>
<p>&#8220;ஆமாம் அங்கிள் கொஞ்சம் குறைஞ்சு போச்சு இந்த முறை. தம்பி வாசுவுக்கு சுரம் வந்துடுச்சு இல்லையா, அதான் சில நாள் ஸ்கூல் தவறிப் போச்சு. &#8221; வருத்தத்துடன் சொல்லிக் கொண்டிருந்தது ராமுவே தான்.</p>
<p>&#8220;இந்தா, இந்த முறை நல்ல ரேங்க் எடுத்தா நான் தரேன்னு சொன்ன வாட்ச். வச்சிக்க..&#8221; புத்தம்புதிதாக ஒளிரும் கைக்கடிகாரம் ஒன்றை எடுத்து அப்பா நீட்டிய போது பாலுவுக்கு அதிகபட்ச கோபம் வந்தது. &#8220;அடுத்த முறையும் நல்லா வந்தால், சைக்கிள் வாங்கித் தருவேன் தெரியுமா?&#8221; என்று அவர் சொன்னதைக் கேட்க பாலு அங்கில்லை.</p>
<p>அவனும் எத்தனை நாட்களாக கைக்கடிகாரம் ஒன்று வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறான். இன்று வரை அவனுக்குக் கொடுக்காமலேயே அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் அப்பா. ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும்போதும் அவனுக்குக் கைக்கடிகாரம் உறுதி என்று நினைத்துக் கொள்வான், இதுவரை அப்பா அவனை இப்படிப் பாராட்டியது கூட இல்லை. போய் அந்தக் கடிகாரத்தைப் பிடுங்கிக் கொண்டு வந்துவிடலாமா என்று பார்த்தான். இருந்தாலும் அப்பாவிடம் அவனுக்குக் கொஞ்சம் பயம் தான். சட்டென சமையலறைக்குத் திரும்பிப் போய்விட்டான்.</p>
<p>&#8220;என்னப்பா கண்ணா, வெளியே விளையாடப் போவலியா?&#8221; என்றாள் அம்மா, ஆசையாக.</p>
<p>&#8220;ஆமாம். அது ஒண்ணு தான் கொறச்சல் இப்போ!&#8221;</p>
<p>பாலுவின் குரலைக்கேட்டு அம்மா அருகில் வந்தாள். &#8220;என்னப்பா பாலு, என்னவோ முணுமுணுக்கிறே?! அப்பா இருக்காரா வாசற்பக்கம்?&#8221;</p>
<p>&#8220;ஆமாம்.. அப்பாவாம் அப்பா.. என்னைக் கண்டாலே அவருக்கு ஆகிறதில்லே. பாரு, பக்கத்துவீட்டு ராமுவை அப்படிச் சீராட்டிகிட்டிருக்காரு! வாட்சாம், சைக்கிளாம்!&#8221;</p>
<p>&#8220;அவன் நல்ல பையன்; பாவம், அம்மா அப்பா இல்லாத பையனில்லையா.. அதான் கொடுக்கிறார்!&#8221;</p>
<p>&#8220;அப்போ நான் என்ன கெட்ட பையனா.. ம்ஹும் உனக்கும் என்னைப் பிடிக்கலை இல்லையா?&#8221;</p>
<p>&#8220;அப்படி இல்லைடா கண்ணா, நீயும் நல்ல பையன் தான்&#8221; தலையை வருடிக் கொடுத்த அம்மாவின் கரத்தைத் தட்டிவிட்டுவிட்டு, பின்பக்கமாகவே வெளியில் ஓடிப் போனான் பாலு.</p>
<p>*****************************</p>
<p>&#8220;ராமு! விளையாட வரியாடா?!&#8221; எங்கே வந்துவிடுவானோ என்று பயந்தபடி பார்த்தான் பாலு. </p></div>
<div align="left"></div>
<div align="left">நல்லவேளை, &#8220;இல்லேடா, நீங்க விளையாடுங்க. நான் என் தம்பி வாசுவை ஸ்கூலிலிருந்து கூட்டி வரணும்.&#8221; என்றபடி நடந்து போனான் ராமு.</p>
<p>அதே சமயம், &#8220;ஏய் பாலு!&#8221; என்று அம்மா அழைத்தார்கள்.</p>
<p>&#8220;என்னம்மா? எதுக்கு இப்போ சத்தம் போடுறே?&#8221;</p>
<p>&#8220;உன் தம்பி சந்துருவை டியூசனிலிருந்து கூட்டி வரணும்.. கொஞ்சம் போய்ட்டு வரியா?&#8221;</p>
<p>&#8220;அடப்போம்மா.. எனக்கு விளையாடப் போவணும்.. அவனை நீயே போய்க் கூட்டி வர வேண்டியது தானே!&#8221;</p>
<p>அதிக வேலைச் சுமையினூடே இதை எப்படிச் செய்வதென்று தெரியாமல் அம்மா வருத்தப்பட்டதில், போனால் போகிறதென்று கிளம்பிப் போனான் பாலு. </p></div>
<div align="left"></div>
<div align="left">******</p>
<p>பாலு சைக்கிள் ஓட்டும் அழகே தனி. அதிவேகமாக அவன் ஓட்டும் போது அது சைக்கிள் மாதிரியே இருக்காது. ஏதோ ரேஸ் குதிரை மாதிரி பறக்கும். தம்பியை வண்டியில் பின்னால் அமர வைத்துக் கொண்டு வண்டியை எடுத்தான் பாலு.</p>
<p>&#8220;அண்ணா, இந்த ஸ்கூல் பையைக் கொஞ்சம் நீ எடுத்துக்கிறியா.. ரொம்ப கனமா இருக்குண்ணா!&#8221; திக்கித் திணறித்தான் சொன்னான் தம்பி.</p>
<p>&#8220;அடப் போடா, உன்னைச் சுமக்கிறதே பெரிய வேலை. இதுல உன் பையை வேற நான் சுமக்கணுமோ.. எல்லாம் முதுகில மாட்டிகிட்டே உட்காரு!&#8221; எகத்தாளமாக சொல்லிக் கொண்டே பாலு வண்டியை மிதித்தான்.</p>
<p>குதிரை மாதிரி பாய்ந்து சென்ற வண்டியைத் திருப்பத்திலும் அதே வேகத்தில் விட்டது தான் பாலு செய்த தவறு. முன்னால் சாலையைக் கடந்து கொண்டிருந்த இருவர் மீது வண்டி கிட்டத்தட்ட மோதுவது போல் போயிற்று. அதிலும், கொஞ்சம் மெதுவாக சென்று கொண்டிருந்த சின்னப் பையனின் மீது நிச்சயமாக மோதி இருப்பான், கூட இருந்தவன் அவனைப் பிடித்திழுத்திராவிட்டால். அதிர்ச்சியில் உடனே பிரேக் பிடிக்கக் கூட தோன்றாமல், கொஞ்சம் தள்ளிப் போய் வண்டியை நிறுத்தினான் பாலு. </p></div>
<div align="left"></div>
<div align="left">வந்து கொண்டிருந்தது, ராமுவும் அவன் தம்பியும் தான். தம்பியைப் பிடித்து இழுத்ததில் பாலன்ஸ் தவறி ராமு கீழே மண்ணில் விழுந்துவிட்டான். </div>
<div align="left"></div>
<div align="left">&#8220;சாரி ராமு..&#8221; குரல் நடுநடுங்க பாலு சொல்லவும், முட்டிக்காலில் சிராய்த்த இடத்திலிருந்து எட்டிப் பார்த்த இரத்தத்தைத் துடைத்தபடியே, &#8220;பரவாயில்லை பாலு! வாசு கொஞ்சம் மெதுவாத் தான் நடப்பான். அது தான் பிரச்சனை. என் மேல தான் தப்பு. அவனைப் போய் இந்த ரோட்டைக் கிராஸ் பண்ணத் தனியா விட்டிருக்கக் கூடாது..&#8221; ராமு சொல்லவும், பாலு கூனிக் குறுகிப் போனான்.</p>
<p>பதிலுக்குக் காத்திராமல், விபத்தின் அதிர்ச்சியில் பயந்து போய் அழத் தொடங்கிவிட்டிருந்த தம்பியைத் தட்டிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தி, அவன் பை மட்டுமில்லாமல் அவனையும் கொஞ்ச நேரம் தூக்கிவைத்துக் கொண்டு நடந்த ராமுவைப் பார்த்துக் கொண்டே இருந்த பாலுவுக்குத் தன் தவறும் அப்பா ராமுவைக் கொண்டாடுவதற்கான காரணமும் மெல்ல புரியத் தொடங்கியது.</p>
<p>&#8216;தன்னை அழைத்துப் போக வந்ததால் தான் இந்த விபத்து நிகழ்ந்துவிட்டது&#8217; என்று அண்ணன் குற்றம் சாட்டப் போகிறானோ என்று எதிர்பார்த்து பயந்து குறுகிக் கொண்டு அமர்ந்திருந்த தம்பி சந்துருவை ஆதரவாக பார்த்த பாலு அவன் முதுகில் இருந்து பையை வாங்கிக் கொண்டு பாசமாக அவன் தலையைத் தடவியும் கொடுத்தது சந்துருவுக்கு மிகப் பெரிய ஆச்சரியமாக இருந்தது. அன்றிலிருந்து தம்பி விசயத்தில், பாலுவின் மனமாற்றத்தைக் கவனித்த அவர்கள் அம்மா, அப்பாவுக்கும் தான்!</p>
<p><span style="font-size:85%;">கோப்புக்காக இங்கே.. பிரசுரித்த </span><a href="http://www.tamiloviam.com/unicode/11300611.asp"><span style="font-size:85%;"><strong>தமிழோவியத்திற்கும்</strong></span></a><span style="font-size:85%;"><strong> </strong>தேர்வு செய்த அன்றைய சிறப்பாசிரியர் </span><a href="http://madippakkam.blogspot.com"><span style="font-size:85%;"><strong>லக்கிலுக்கி</strong></span></a><span style="font-size:85%;">ற்கும் நன்றிகளுடன்&#8230; </span></div>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/poonspakkangkal.wordpress.com/254/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/poonspakkangkal.wordpress.com/254/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/poonspakkangkal.wordpress.com/254/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/poonspakkangkal.wordpress.com/254/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/poonspakkangkal.wordpress.com/254/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/poonspakkangkal.wordpress.com/254/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/poonspakkangkal.wordpress.com/254/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/poonspakkangkal.wordpress.com/254/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/poonspakkangkal.wordpress.com/254/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/poonspakkangkal.wordpress.com/254/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/poonspakkangkal.wordpress.com/254/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/poonspakkangkal.wordpress.com/254/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/poonspakkangkal.wordpress.com/254/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/poonspakkangkal.wordpress.com/254/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/poonspakkangkal.wordpress.com/254/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/poonspakkangkal.wordpress.com/254/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=poonspakkangkal.wordpress.com&amp;blog=534143&amp;post=254&amp;subd=poonspakkangkal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://poonspakkangkal.wordpress.com/2007/03/29/%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>6</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1d87fd4312cf6e975e23f6e3a7d42ee5?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">பொன்ஸ்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது</title>
		<link>http://poonspakkangkal.wordpress.com/2007/03/27/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://poonspakkangkal.wordpress.com/2007/03/27/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 27 Mar 2007 08:46:00 +0000</pubDate>
		<dc:creator>பொன்ஸ்</dc:creator>
				<category><![CDATA[புத்தகம்]]></category>
		<category><![CDATA[விமர்சனம்]]></category>

		<guid isPermaLink="false">http://poonspakkangkal.wordpress.com/2007/03/27/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</guid>
		<description><![CDATA[&#8216;பெண்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்&#8217;, &#8216;பெண்புத்தி பின்புத்தி&#8217; என்பது போன்ற பழமொழிகள்/பொதுமொழிகள் உருவானதற்கு ஒரே காரணமாக, எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் முன்வைப்பது ஆண்கள் சமைப்பதில்லை என்பது தான். &#8220;நச்சரிக்கும் வீட்டு வேலைகளைப் பெண்கள் தலையில் கட்டிவிட்டு, வீடு, சமையல் போன்ற தளைகள் அவர்கள் கால்களைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கும் பொழுது எப்படி மற்ற உலக விசயங்களில் அவர்களால் கவனம் செலுத்த முடியும்? பழமொழிகள் எதிர்பார்க்கும் முன்யோசனைக்காரிகளாய் அவர்களால் எப்படிப் பிரகாசிக்க முடியும்?&#8221; என்ற கேள்வியை முன்வைக்கிறது இந்தப் புத்தகம். [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=poonspakkangkal.wordpress.com&amp;blog=534143&amp;post=253&amp;subd=poonspakkangkal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>&#8216;பெண்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்&#8217;, &#8216;பெண்புத்தி பின்புத்தி&#8217; என்பது போன்ற பழமொழிகள்/பொதுமொழிகள் உருவானதற்கு ஒரே காரணமாக, எழுத்தாளர் <strong>ச.தமிழ்ச்செல்வன்</strong> முன்வைப்பது ஆண்கள் சமைப்பதில்லை என்பது தான். &#8220;நச்சரிக்கும் வீட்டு வேலைகளைப் பெண்கள் தலையில் கட்டிவிட்டு, வீடு, சமையல் போன்ற தளைகள் அவர்கள் கால்களைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கும் பொழுது எப்படி மற்ற உலக விசயங்களில் அவர்களால் கவனம் செலுத்த முடியும்? பழமொழிகள் எதிர்பார்க்கும் முன்யோசனைக்காரிகளாய் அவர்களால் எப்படிப் பிரகாசிக்க முடியும்?&#8221; என்ற கேள்வியை முன்வைக்கிறது இந்தப் புத்தகம்.</p>
<p align="center"><img src="http://poorna.rajaraman.googlepages.com/ankal.jpg" /></p>
<p>&#8220;ஆதிகாலம் முதலே சமைப்பது ஆணின் தொழில். ஏமாற்றிப் பெண்கள் தலையில் ஏற்றிவிட்டார்கள்&#8221; என்று தொடங்குகிறது &#8220;ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது&#8221; புத்தகம். மானுட இனத்தின் தோற்றம், பரிணாம வளர்ச்சி என்று சரித்திரங்களிலிருந்து சமையல் வரை மெல்ல மெல்ல அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர்.</p>
<p>தானே சமைத்துச் சாப்பிடவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுமே என்ற ஒரே காரணத்திற்காக, வெளிநாடுகளுக்குப் போகத் தயங்கும் என் தோழனிடம் &#8220;ஒரு மனிதன் தான் உயிர் வாழத் தேவையான உணவைத் தானே சமைக்கத் தெரியாவிட்டால், அவன் வாழ்வதற்கே தகுதியில்லாதவன்&#8221; என்று பழிச்சண்டை போட்டுக் கொண்டிருக்கும் என் கையில் இந்த மாதிரி, &#8220;சமையல் என்பதே முழுதாக, மொத்தமாக ஆணின் வேலை தான்; பெண்கள் செய்யத் தேவையே இல்லை&#8221; என்று சொல்லும் புத்தகம் கிடைத்தால் விட முடியுமா? (என்னத்த சொல்ல, தோழனுக்குத் தமிழ் படிக்கத் தெரியாது. ஆங்கிலப் பெயர்ப்பு இருக்கான்னு கேட்க வேண்டும்..)</p>
<p>சமையல் பெண்பாற்தொழில் ஆனதன் காரணங்களை வேண்டிய மட்டும் அலசிய பின்னர், சமைத்தல் வரலாற்றுக்குள்ளும், உணவின் அரசியலுக்குள்ளும் புகுந்து வேகமெடுக்கிறது புத்தகம். இந்திய சமையல் என்று இன்று அழைக்கப்படும் சமையலில் எப்படி ஒவ்வொரு கட்டத்தில் அரேபியர், சிரியர்கள், கிரீஸ், சீனர்கள், போர்த்துகீசியர்கள் என்று பல நாட்டு விளைபொருட்களும் சமையல் முறைகளும் எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை விளக்குகிறார் நூலாசிரியர். ஒருசில உணவுவகைகளை விட்டு ஒதுங்குதல், ஒதுக்குதல் மூலம் எப்படி மனிதர்களிடையே உயர்வு-தாழ்வு கற்பிக்கப்படுகிறது என்னும் உணவின் அரசியலையும் தொட்டுச் செல்லத் தயங்கவில்லை.</p>
<p>வரலாற்றை அடுத்து சமையலறையின் சுற்றுக் காரியங்களை விளக்குகிறார். அடுக்களையின் ஒழுங்கு, சுத்தம், பாத்திரங்கள் அடுக்கும் முறை, தரை மொழுகுதல், கழுவுதல், பொருட்களைத் தேவையான சமயத்தில் வாங்கி நிரப்புவது என்று ஒவ்வொரு சின்னச் சின்ன தகவலையும் திறம்படத் தொகுத்துத் தருகிறார். வீட்டை விட்டு முதன்முதல் வெளியூர் சென்று நாங்கள் சமையலறை அமைத்தபொழுது செய்யவிட்டுப் போன விவரங்கள் கூட இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. &#8220;எங்கள் உறவினர் வீட்டில், திருமணமாகி தனிக்குடித்தனம் போகும் பெண்ணுக்கு ரூல்ட் நோட் போட்டு சின்னச் சின்ன சமையற்குறிப்புகள் எழுதிக் கொடுத்திருந்தார் அவர் தாயார்.&#8221; என்று எப்போதோ படித்த மங்கையர் மலர் சிறுகுறிப்பு நினைவுக்கு வருகிறது. ரூல்டு நோட்களை விட, நண்பனின்/சகோதரனின் திருமணத்தில் பரிசளிக்க மிக நல்ல புத்தகம் இது தான்.</p>
<p>சமையலறை ஒழுங்குக்கு அடுத்து சமையலறைக் காதல் மிக அழகான பகுதி. கணவனும் மனைவியுமாக சமைக்கும் பொழுது பேசும் ஒவ்வொரு வார்த்தையுமே கவிதை தான் என்பதைப் படிக்கையில், எங்கள் வீட்டில் அம்மாவும் அப்பாவும் (கொஞ்சம் அலுத்துக் கொண்டாலும்) சேர்ந்து சமைக்கும் நாட்களின் நினைவு வந்து போவதைத் தடுக்க முடிவதில்லை. என்ன இருந்தாலும் அடுக்களைக் காதல் அழகு தான் <img src='http://s2.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<table align="center" border="1">
<tbody>
<tr>
<td>
<p align="center"><strong><em><span style="color:#3366ff;">அரிசிக்கும் பருப்புக்கும் தெரியாது -<br />சமைப்பது ஆணா பெண்ணா என்பது.<br />யார் மூட்டினாலும் அடுப்பு எரியத்தான் செய்கிறது.<br />அரிசி வேகத்தான் செய்கிறது. ஆனாலும் சமைப்பது<br />பெண்களின் வேலை தான் என்கிற மனப்பதிவு<br />ஆண்டாண்டு காலமாய் நமக்குள் அழுத்தமாய்க் கிடக்கிறது.<br />&#8230;..<br />அம்மாவையும் மனைவியையும்<br />மகளையும் உயிரினும் மேலாய் நேசிக்கிற<br />நாம் அவர்களின் விடுதலை பற்றி<br />நிஜமாகவே அக்கறை கொண்டுள்ளோமா?</span></em></strong> </p>
<p align="right"><strong><em>- ச. தமிழ்ச்செல்வன்</em></strong></p>
</td>
</tr>
</tbody>
</table>
<p>அழகு என்றதும் அடுத்த அத்தியாயம் சமையலின் அழகியல் பேசுகிறது. ஒவ்வொரு பதார்த்தமும் காய் நறுக்கும் அளவுகளில் தொடங்கி, மசாலா அளவுகள், மஞ்சள் பொடி அளவுகள் என்று ஒவ்வொரு கட்டத்திலும் அழகுக்கான கூறுகள் கொட்டிக் கிடப்பதை நூலாசிரியர் விளக்கும்போது, பழக்கத்தின் காரணமான செய்முறை மூலமே கற்கும் இது போன்ற விவரங்களை முழுமையாக பட்டியலிட ஏன் வேறு புத்தகங்கள் இல்லை என்ற கேள்வி எழுகிறது.</p>
<p>சமையலின் வரலாறு, சுற்றுக் காரியங்கள், அழகியல் என்று எல்லா வெளிவிவகாரங்கள் மூலம் கொஞ்சங் கொஞ்சமாக இழுத்து, சமையலறையின் உள்ளே கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் நூலாசிரியர். அடுப்பின் வகைகள், அவற்றைப் பயன்படுத்தும் முறைகள், தேவையான பாத்திரங்கள், கரண்டிகள் போன்ற சமையல் சார்ந்த பொருட்களை அறிமுகப்படுத்தி அப்படியே தொடர்ந்து, குழம்பு, ரசம் போன்றவற்றிற்கான மசாலா பொடிகள், வடகங்கள், இட்லி, தோசைப் பொடிகள் ஊறுகாய் வகைகள் போன்ற முன் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளின் சமையற்குறிப்பையும் முன்வைக்கிறார்.</p>
<p>சமையலின் முன் தயாரிப்புகளையும், சமைப்பதற்கான காரண காரியங்களையும் கொஞ்சம் விரிவாகவே அலசும் இந்நூல், தினசரி சமையலுக்கான குறிப்புகளைக் குறைவாகவே கொண்டிருக்கிறது. சாதம், குழம்பு, ரசம், பொரியல், கூட்டு, தோசை, இட்லி, சப்பாத்தி, பூரி, குருமா, உப்புமா போன்ற சுலபவகை குறிப்புகளுடன் நிறுத்திக் கொள்கிறார் நூலாசிரியர். எப்படியும், இந்த அடிப்படை சமையல் குறிப்புகள் தெளிவாகிவிட்டால், அடுத்தடுத்து வெவ்வேறு பெரிய புத்தகங்களைப் படித்து நன்றாக சமைக்கத் தொடங்கிவிடலாம் என்பதும் உண்மை தான். அடிப்படை சமையற்குறிப்புகள் கூட பொதுவான சமையற்குறிப்பு புத்தகங்கள் சொல்வது போன்ற மேலோட்டமான &#8211; அதாவது ஏற்கனவே வெந்நீர் வைக்கும் அளவுக்காவது தெரிந்தவர்களுக்கான- குறிப்பாக இல்லாமல், சமையல் பற்றி ஏதும் தெரியாதவர்களுக்கான சின்னச் சின்ன விவரங்களையும் சேர்த்துச் சொல்கிறது.</p>
<p>நடனம், இசை, தையல், எம்ப்ராய்டரி போன்ற நுண்கலைகளும், மாரல் ஸ்டடிடீஸ், கணக்கு போன்ற தினசரி வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களையும் கொண்டு விளங்கும் நமது பாட திட்டத்தில் சமையல் கலைக்கு ஏன் இடமில்லை? ஏதேதோ வேதியல் வினைகளை அடுப்புகளுடனும், ஆசிட்களுடனும் சின்ன வயதிலேயே சோதித்துப் பார்க்க முடிந்த குழந்தைகள் ஏன் சமையல் மட்டும் கற்பதில்லை?</p>
<p>இந்த நூல் எனக்குள் ஏற்படுத்திய இந்தக் கேள்விக்குப் பதில் பல வகையாக இருக்கின்றன. சமையல் வேலைகளை, பெரிய மனம் கொண்டு ஆண்கள் இப்போதெல்லாம் பகிர்ந்து கொண்டாலும், அடிப்படையில் இந்தப் பெண்கள் தொழிலை ஆண்களுக்கு எப்படிச் சொல்லிக் கொடுக்க முடியும்? கோ-எட் பள்ளிகளில் இதைச் செய்யாமலும் ஒதுக்குவதும் சிரமம்.</p>
<p>இன்னுமொரு காரணம், பொதுவாக சமையல் ஒவ்வொரு இனக் குழு சார்ந்த பயிற்சியாக இருக்கிறது. அந்தந்த இனக் குழுவில் இருப்பவர்கள் அவர்தம் வழிமுறைகளுக்கும், வீட்டு வழக்கங்களுக்கும் ஏற்ப சமையலின் சில சின்னச் சின்ன விவரங்களைக் கற்கிறார்கள். முற்காலத்தில் பெண்களே தத்தம் கணவன் வீடுகளுக்குப் போனபின்னால் தான் சமையல் கற்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கணவன் வீட்டாரின் ருசிகளுக்கும் வழக்கத்திற்கும் ஏற்றாற்போல், சமைத்து புகுந்த வீட்டுப் பெருமையையும் பிறந்தவீட்டுப் புகழையும் கட்டிக் காக்க அவர்களுக்கு இந்த வழி அவசியமாக இருந்திருக்க வேண்டும். இந்தக் காரணத்துக்காகவும் ஒரு பொதுவான சமையலறை, பள்ளிகளில் சாத்தியமில்லாமல் போயிருக்கலாம்.</p>
<p>எப்படியோ, இனிமேல் சமையலென்று ஒரு பாடத்தைச் சேர்ப்பதாக இருந்தால், புத்தகம் தனியாக அச்சடிக்க வேண்டாம். &#8220;</p>
<p>இந்தப் புத்தகத்தின் வரவேற்பைப் பார்த்தபின், ஆண்களுக்கான சமையற்பட்டறைகளை உருவாக்கும் யோசனை ஆசிரியருக்கு இருந்திருக்கும் என்பது முன்னுரையில் தெரிகிறது. டிசம்பர் 2006இல் முதற்பதிப்பு கண்ட புத்தகத்தின் சமையற்பயிற்சி பட்டறை ஜனவரியிலேயே சாத்தியமாகி இருக்கிறது. இன்னும் இது போன்ற பயிற்சிப் பட்டறைகள் எண்ணிக்கை அதிகமாக ஆக, நூலாசிரியர் கற்பனை செய்யும் &#8216;சமையலறைக் காதல்கள்&#8217; சீக்கிரமே தமிழகமெங்கும் சாத்தியமாகிவிடும் என்றே தோன்றுகிறது.</p>
<p>
<blockquote>புத்தகம் : <strong>ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது</strong><br />ஆசிரியர் : ச. தமிழ்ச்செல்வன்<br />வெளியிட்டோர் : வாசல், <br />                4 Oடி/4, முதல் தெரு,<br />                வசந்த நகர்,<br />                மதுரை &#8211; 625 003<br />                செல் &#8211; 98421 02133 <br />முதல் பதிப்பு : டிசம்பர் 2006<br />விலை : ரூ 45/-</p></blockquote>
<p>
<div></div>
</td>
</tr>
</tbody>
<div></div>
<div></div>
<div></div>
<p>முதலடி எடுத்துக் கொடுத்து உதவிய <a href="http://asifmeeran.blogspot.com/2007/03/blog-post_27.html">ஆசிப் அண்ணாச்சிக்கு</a> இந்த இடுகை சமர்ப்பணம் <img src='http://s0.wp.com/wp-includes/images/smilies/icon_biggrin.gif' alt=':-D' class='wp-smiley' /> </p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/poonspakkangkal.wordpress.com/253/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/poonspakkangkal.wordpress.com/253/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/poonspakkangkal.wordpress.com/253/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/poonspakkangkal.wordpress.com/253/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/poonspakkangkal.wordpress.com/253/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/poonspakkangkal.wordpress.com/253/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/poonspakkangkal.wordpress.com/253/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/poonspakkangkal.wordpress.com/253/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/poonspakkangkal.wordpress.com/253/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/poonspakkangkal.wordpress.com/253/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/poonspakkangkal.wordpress.com/253/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/poonspakkangkal.wordpress.com/253/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/poonspakkangkal.wordpress.com/253/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/poonspakkangkal.wordpress.com/253/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/poonspakkangkal.wordpress.com/253/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/poonspakkangkal.wordpress.com/253/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=poonspakkangkal.wordpress.com&amp;blog=534143&amp;post=253&amp;subd=poonspakkangkal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://poonspakkangkal.wordpress.com/2007/03/27/%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>47</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1d87fd4312cf6e975e23f6e3a7d42ee5?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">பொன்ஸ்</media:title>
		</media:content>

		<media:content url="http://poorna.rajaraman.googlepages.com/ankal.jpg" medium="image" />
	</item>
		<item>
		<title>அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்</title>
		<link>http://poonspakkangkal.wordpress.com/2007/03/27/%e0%ae%85%e0%ae%b2%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/</link>
		<comments>http://poonspakkangkal.wordpress.com/2007/03/27/%e0%ae%85%e0%ae%b2%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/#comments</comments>
		<pubDate>Tue, 27 Mar 2007 06:06:00 +0000</pubDate>
		<dc:creator>பொன்ஸ்</dc:creator>
				<category><![CDATA[புத்தகம்]]></category>
		<category><![CDATA[விமர்சனம்]]></category>

		<guid isPermaLink="false">http://poonspakkangkal.wordpress.com/2007/03/27/%e0%ae%85%e0%ae%b2%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/</guid>
		<description><![CDATA[தனி மனிதன் இடமற்ற இடத்தில் (Non-Place) வாழ நேர்ந்தவன். அனுதினமும் மொழி, தேசம், இனம் போன்ற அடையாளங்களைத் தொலைத்து வருபவன். தவிரவும் புலம் பெயர்தலால் கலாச்சார அதிர்ச்சிகளுக்கு ஆளானாவன். நிச்சயமற்ற இருத்தலின் விளைவாக சமநிலை குலைந்து போனவன். இயல்பிலேயே இரட்டைத்தன்மை கொண்டவன். இதனால் சமயங்களில் இவன் தான்(Ego) வேறு தன் ஆன்மா(Alter Ego) வேறு என்று பிரிந்து போக நேர்கிறது. அதன் விளைவாக தன் ஆன்மாவுடனேயே தான் மோதிக் கொள்ளும் மல்யுத்தம் சாத்தியமாகிறது. இந்த யுத்தம் சம்பந்தமற்றதை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=poonspakkangkal.wordpress.com&amp;blog=534143&amp;post=252&amp;subd=poonspakkangkal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<blockquote><table border="1">
<tbody>
<tr>
<td>தனி மனிதன் இடமற்ற இடத்தில் (Non-Place) வாழ நேர்ந்தவன். அனுதினமும் மொழி, தேசம், இனம் போன்ற அடையாளங்களைத் தொலைத்து வருபவன். தவிரவும் புலம் பெயர்தலால் கலாச்சார அதிர்ச்சிகளுக்கு ஆளானாவன். நிச்சயமற்ற இருத்தலின் விளைவாக சமநிலை குலைந்து போனவன். இயல்பிலேயே இரட்டைத்தன்மை கொண்டவன். இதனால் சமயங்களில் இவன் தான்(Ego) வேறு தன் ஆன்மா(Alter Ego) வேறு என்று பிரிந்து போக நேர்கிறது. அதன் விளைவாக தன் ஆன்மாவுடனேயே தான் மோதிக் கொள்ளும் மல்யுத்தம் சாத்தியமாகிறது.</p>
<p>இந்த யுத்தம் சம்பந்தமற்றதை இணைக்கிறது (Fuses), சம்பந்தமுள்ளதைக் குழப்புகிறது (Confuses), கால வித்தியாசத்தைக் கடந்து எல்லாக் காலங்களுக்குமாக வியாபிக்கிறது (Diffuses). எனவே இவனைப் பற்றி பின்னப்படும் ஒரு கதை பல கதைகளாகத் தன்னைப் பெருக்கிக் கொள்வது (Autofiction) தவிர்க்க முடியாததாகிவிடுகிறது</td>
</tr>
</tbody>
</table>
</blockquote>
<p>என்ற குழப்பமான முன்னுரையோடு தொடங்கியது <strong><em>புதுப்புனல் </em></strong>பதிப்பகத்தின் <strong>&#8220;அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்&#8221;</strong> புத்தகத்தினுடனான என் பயணம்.</p>
<p align="center"><img src="http://poorna.rajaraman.googlepages.com/alex1.JPG" /></p>
<p>&#8220;வரலாற்று நாவல், சமூக நாவல் என்று பிரித்தே படித்திருக்கிறோம், இரண்டும் கலந்த ஒரு நாவல் தமிழில் இல்லையா?&#8221; என்று நண்பரிடம் கேட்ட காரணத்தால் என் கைக்கு வந்து சேர்ந்தது இந்தப் புதினம்.</p>
<p>சரித்திரத்தின் இணையற்ற வீரன் மகா அலெக்ஸாண்டரின் மரணப்படுக்கையிலிருந்து தொடங்கும் இந்த நாவல், சமகாலத்தில் அலெக்ஸ் என்ற புலம்பெயர்ந்த ஈழத் தமிழனின் வாழ்க்கையையும் ஏககாலத்தில் விவரிக்கிறது. சரித்திரகால அலெக்ஸ் பாரசீகத்தில், தன் மரணப்படுக்கையில் பழைய நினைவுகளில் தோய்ந்து எழும்பொழுது, சமகால அலெக்ஸ் எகிப்தில் ஒரு மோசடி வேலையில் இறங்கி இருக்கிறான்.</p>
<p>சரித்திர நாவலாக அலெக்ஸின் பிறந்தநாள் தொட்டு ஒவ்வொரு நிகழ்வும் அவன் கண்வழியே சொல்லப்படுகிறது. தன்னுடைய தவறுகள், வெற்றிகள், வித்தியாசமான சந்திப்புகள், கேளிக்கைகள், குற்றங்கள் என்று அலெக்ஸின் உள்ளே கனன்று கொண்டிருக்கும் போர்வெறியை அழகாக சித்தரிக்கிறார் ஆசிரியர்.</p>
<p>இன்னொரு பக்கம், இளவயதிலிருந்து போரின் கொடுமைகளால் அலைக்கழிக்கப்பட்டு, போரே பிடிக்காமல் போன சமகால அலெக்ஸ், அவனை உளவு பார்க்க வந்திருக்கும் இலங்கை அரசாங்க ஒற்றன் ரனில் என்று வெவ்வேறு கால நிலையை ஆரம்பத்திலிருந்தே அழகாக சொல்லிச் செல்கிறார்.</p>
<p>ஏனோ, தமிழ்சினிமா பார்த்துக் கெட்டுபோன எனக்கு, கதையில் ஒரு நாயகி வந்த பின்னால் தான் சுறுசுறுப்பாக படிக்க முடிகிறது. அதுவரையிலான எழுபது பக்கங்களை இரண்டு மாதமாக தடவிக் கொண்டிருந்தவள், நாயகி ருக்ஸானா வந்த பின்னால் ஒரே இரவில் கீழே வைக்காமல் படித்து முடித்துவிட்டேன்.</p>
<p>இந்த இரண்டு அலெக்ஸாண்டர்களைத் தவிர, அமெரிக்க உளவாளிகள், சர்வதேச பயங்கரவாதிகள், சமகாலத்தின் மற்றொரு போர்ப்பிரதேசமான குர்திஸ்தானின் இனப் போராட்டம் என்று கதை பல்வேறு திசைகளில் பயணிக்கிறது. கடந்த காலம், நிகழ்காலம் தவிர்த்து, எதிர்காலத்துக்குள்ளும் பிரவேசிக்கிறார் ஆசிரியர்.</p>
<p>காலயந்திரம் போன்றதொரு கற்பனையில் கதைநாயகன் சமகால அலெக்ஸும் அவன் தோழி ருக்சானாவும் வெவ்வேறு எதிர்காலங்களுக்குப் போய்வருகிறார்கள். IF-ELSE-ENDIF வைத்து எழுதிய C நிரலி மாதிரி, எல்லாமே சாத்தியமாகக் கூடிய வருங்காலங்களாகத் தான் தோன்றுகின்றன..</p>
<ul>
<li>அணுஆயுதப் போரில் பெரும்பாலும் அழிந்து பதுங்கு குழிகளுள் மனிதர்கள் வாழும் ஒரு உலகம், </li>
<li>செயற்கையான பரிணாம வளர்ச்சியால், அதீத மனிதன், மனிதன், உப மனிதன் என்று வர்ணாசிரம தர்மத்தின் நூதன வடிவத்தில் பிரிந்து இன்னும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் உலகம், </li>
<li>உண்மையான கம்யூனிச ஆட்சி மலர்ந்து அரசாங்கங்கள் அழிந்த மக்களாட்சி மிக்க மற்றொரு உலகம், </li>
<li>சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் பூமியை விட்டுவிட்டு வெவ்வேறு கிரகங்களுக்கு மாறிப் போய்விட்ட ஒரு உலகம்</li>
</ul>
<p>என்று வெவ்வேறு எதிர்காலங்கள் சித்தரிக்கப்படுகின்றன.</p>
<p>இந்தப் பல்வேறு வருங்காலங்களின் பிரச்சனைகள், சிறப்புகள், வசதிகள், புரட்சிகள், monotony என்று எல்லாவற்றையும் பேசுகிறார் ஆசிரியர். </p>
<ul>
<li>அதீத மனிதர்கள் உலகத்தின் தலைவன் சேர்மன் அலெக்ஸாண்டர், </li>
<li>எல்லா மனிதர்களிடையிலும் அதீத சமநிலை வலியுறுத்தும் கம்யூனிச உலகம் ஒரே மாதிரி இருப்பதால் வெறுத்துப்போய் தற்கொலை செய்ய விரும்பும் கலைஞன் அலெக்ஸாண்டர், </li>
<li>சமகாலத்தில் காரணமின்றி தீவிரவாதி என்று சந்தேகத்திற்கு உட்படுத்தப்படுவதால், சர்வதேச தீவிரவாதிகளுடன் இணைந்து மோசடிக்கும்பலுக்கு உதவும் வரைகலைஞன் அலெக்ஸாண்டர், </li>
<li>போர்வெறி பிடித்த பண்டைய அலெக்ஸாண்டர்</li>
</ul>
<p>- அனைவரும் ஒன்றாக சந்தித்து அவரவர் சூழல் சார்ந்த மனநிலையில் பேசும் பகுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. </p>
<p>குர்திஸ் இனப் போராளி ஓசலோன் பற்றிய குறிப்புகள், அலெக்ஸாண்டரின் வாழ்க்கை வரலாறு, சி.ஐ.ஏ விசாரணை முறைகள், எகிப்தின் தற்கால வாழ்நிலை, பிரமிடுகளின் பண்டைய வரலாற்றுச் செய்திகள் என்று பலதுறை குறிப்புகளில் ஆசிரியரின் உழைப்பு மிக அருமையாகத் தெரிகிறது. ஆங்கில நாவலாக இருந்திருந்தால், கண்டிப்பாக இது ஒரு பெஸ்ட் செல்லராகி இருக்கும்.</p>
<p>தமிழில் வரலாற்றுப் புதினங்கள், சமகால புதினங்கள் என்ற பெயரில் ஓரிரு குடும்பங்களுக்குள் நிகழ்பவற்றை முன்வைக்கும் சமூகக் கதைகள், இதிகாச, புராண, வரலாற்று நையாண்டிகள் என்று ஒரே மாதிரியான நாவல்கள் படித்திருந்த எனக்கு, இந்த பல்வேறு காலங்களையும் தொட்டுப் போகும், சமகால அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் ஆழ்ந்த தெளிவில்லாமலேயே மேலோட்டமாக கொஞ்சமே உள் அரசியலைத் தொட்டு சொல்லிச் செல்லும் அதிரடி, துப்பறியும், சர்வதேசம் சார்ந்த ஒரு வேகமான தமிழ்நாவல் நல்லதொரு வாசிப்பனுபவமாக இருந்தது. ஒரு கதை பல கதைகளாக பெருக்கிக் கொள்ளும் ஒரு ஆட்டோபிக்சன் கதையில், ஒவ்வொரு கதையையும் என்னால் தொடர முடிகிறதென்பதையும், இன்னும் அதைப் புரிந்து ரசிக்கவும் முடிகிறதென்பதையும் இன்னமும் நம்பமுடியவில்லை. </p>
<blockquote><p>புத்தகம் : <a href="http://www.anyindian.com/product_info.php?manufacturers_id=37&amp;products_id=34701&amp;osCsid=334322c421ecaf50fc29ab4d78e38b41">அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்</a><br />ஆசிரியர் : எம்.ஜி. சுரேஷ்<br />வெளியிட்டோர் : புதுப்புனல் பதிப்பகம்<br />முதல் பதிப்பு : டிசம்பர் 2000<br />விலை : ரூ 115/-</p></blockquote>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/poonspakkangkal.wordpress.com/252/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/poonspakkangkal.wordpress.com/252/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/poonspakkangkal.wordpress.com/252/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/poonspakkangkal.wordpress.com/252/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/poonspakkangkal.wordpress.com/252/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/poonspakkangkal.wordpress.com/252/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/poonspakkangkal.wordpress.com/252/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/poonspakkangkal.wordpress.com/252/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/poonspakkangkal.wordpress.com/252/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/poonspakkangkal.wordpress.com/252/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/poonspakkangkal.wordpress.com/252/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/poonspakkangkal.wordpress.com/252/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/poonspakkangkal.wordpress.com/252/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/poonspakkangkal.wordpress.com/252/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/poonspakkangkal.wordpress.com/252/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/poonspakkangkal.wordpress.com/252/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=poonspakkangkal.wordpress.com&amp;blog=534143&amp;post=252&amp;subd=poonspakkangkal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://poonspakkangkal.wordpress.com/2007/03/27/%e0%ae%85%e0%ae%b2%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/feed/</wfw:commentRss>
		<slash:comments>5</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1d87fd4312cf6e975e23f6e3a7d42ee5?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">பொன்ஸ்</media:title>
		</media:content>

		<media:content url="http://poorna.rajaraman.googlepages.com/alex1.JPG" medium="image" />
	</item>
		<item>
		<title>போட்டி முடிவுகள்: விடை தேடும் வினா? :</title>
		<link>http://poonspakkangkal.wordpress.com/2007/03/22/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a4%e0%af%87/</link>
		<comments>http://poonspakkangkal.wordpress.com/2007/03/22/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a4%e0%af%87/#comments</comments>
		<pubDate>Thu, 22 Mar 2007 07:08:00 +0000</pubDate>
		<dc:creator>பொன்ஸ்</dc:creator>
				<category><![CDATA[விமர்சனம்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு பொன்ஸ்]]></category>

		<guid isPermaLink="false">http://poonspakkangkal.wordpress.com/2007/03/22/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a4%e0%af%87/</guid>
		<description><![CDATA[நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விரும்புவதை மட்டும் கொடுப்பதற்கு பதிவுகளா? அல்லது நமக்கு விருப்பமானதை, நாம் சொல்ல விரும்புவதை அனைத்தையும் சொல்ல நமது பதிவுகளா? போன முறை போல் தலைப்பில் சில நெருடல்கள் இருந்தன. விவாதிப்பவர்கள் கண்டிப்பாகச் சுட்டிக் காட்டுவார்கள் என்று நாங்களும் விட்டுவிட்டோம். இது போன்ற தலைப்பின் கருத்துக் குழப்பங்களையும் சேர்த்துச் சுட்டிக் காட்டக் கூடியவர்கள் பங்கு கொள்ளும் பொழுது தான், இந்த விவாதங்கள் சரியான திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதையும் [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=poonspakkangkal.wordpress.com&amp;blog=534143&amp;post=251&amp;subd=poonspakkangkal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<blockquote><p><strong><a href="http://tamiltalk.blogspot.com/2007/03/blog-post_20.html">நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விரும்புவதை மட்டும் கொடுப்பதற்கு பதிவுகளா? </a></strong></p>
<p align="center"><strong><a href="http://tamiltalk.blogspot.com/2007/03/blog-post_20.html">அல்லது</a></strong></p>
<p><strong><a href="http://tamiltalk.blogspot.com/2007/03/blog-post_20.html">நமக்கு விருப்பமானதை, நாம் சொல்ல விரும்புவதை அனைத்தையும் சொல்ல நமது பதிவுகளா?</a></strong></p>
</blockquote>
<p>போன முறை போல் தலைப்பில் சில நெருடல்கள் இருந்தன. விவாதிப்பவர்கள் கண்டிப்பாகச் சுட்டிக் காட்டுவார்கள் என்று நாங்களும் விட்டுவிட்டோம். இது போன்ற தலைப்பின் கருத்துக் குழப்பங்களையும் சேர்த்துச் சுட்டிக் காட்டக் கூடியவர்கள் பங்கு கொள்ளும் பொழுது தான், இந்த விவாதங்கள் சரியான திசையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.</p>
<p>எனவே, தலைப்பில் லேசான குழப்பம் இருப்பதை உணர்ந்து, அதில் தெளிவைக் கேட்டுப் பெற்ற <strong><a href="http://tamiltalk.blogspot.com/2007/03/blog-post_20.html#comment-6575947286620839483">இனியன் </a></strong>மற்றும் <a href="http://tamiltalk.blogspot.com/2007/03/blog-post_20.html#comment-6210939021436106783"><strong>முத்துலட்சுமி</strong>யின்</a> பின்னூட்டங்களுக்குப் பின்னான பேச்சுக்களையே கருத்தில் கொண்டு தான் இந்த விவாதத்தின் வெற்றியாளரைத் தேர்வு செய்ய முடியும்.</p>
<p><em>ஒரு இடுகைக்கு நிறைய பின்னூட்டம் வருகிறது என்றால், அந்த இடுகையின் கருத்து நிறைய பேருக்குப் போய்ச் சேருகிறது. ஆக, நிறைய பேர் பின்னூட்டம் இடும் வண்ணமான, நிறைய பேர் ஒப்புக் கொள்ளும் விதமான வார்ப்பிலேயே நம் கருத்துக்களை எடுத்துச் சொல்ல வேண்டும் </em>என்கிறார் <strong>முத்துலட்சுமி</strong>. முத்துலட்சுமி கருத்துக்கு ஓரளவுக்கு ஒட்டி வருகிற, அதாவது<em> நிறைய பின்னூட்டம் வேண்டும் என்று ஒரு பதிவர் நினைத்தால் அவர் நகைச்சுவைகளை மட்டுமே எழுதலாம்</em> என்று பேசியிருக்கும் <strong>நிலா</strong>, நடுவில் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்களையும் தலைப்புத் திருத்தங்களையும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.</p>
<p>எதிரணியில் பேசியிருப்பவர்கள், <strong>ராமச்சந்திரன் உஷா</strong>வும் <strong>இனியனும்</strong>. <em>&#8220;குழந்தைகள் வளரும் கால கட்டங்களில் ஆரம்பகால பாராட்டுகளாக பின்னூட்டங்கள் அவசியம், ஆனால், கொஞ்சம் வளர்ந்த பின்னர், நம் கருத்துக்களுக்காக நமது வலைப்பதிவு என்று மாறுவது மிக முக்கியம்&#8221;</em> என்ற <strong>உஷா</strong>வின் வாதம் ரொம்பவும் ஏற்புடையாதாக தோன்றுகிறது. முக்கியமாக, <strong>இனியன் </strong>சொல்லும்,</p>
<blockquote><p>&#8220;மற்றவர்கள் விரும்புவதைத் தான் எழுதவேண்டும் என்றால்.. யார் அந்த மற்றவர்கள்&#8230; ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான விருப்பங்கள் இருக்கும். எல்லோருடைய விருப்பத்தையும் பதிவு எழுதும் உங்களால் பூர்த்தி செய்ய இயலுமா? என் கருத்தோடு ஒத்துப்போகிறவர்களின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்றுகிறேன் என்று நீங்கள் சொன்னால்.. அதில் உங்கள் விருப்பமும் அடங்கித்தானே இருக்கிறது. பின் எப்படி விருப்புவதை எழுதினேன் என்று சொல்லி விட முடியும்..?&#8221;</p></blockquote>
<p>போன்ற பகுதிகள் கண்டிப்பாக சிந்தனையைத் தூண்டுபவை. அதிலும்<br />
<blockquote>&#8220;நாம் எழுதும் பதிவுகளை படித்த உடன் எதிரில் இருக்கும் ஒருவர் உடனடியாக திருந்த வேண்டும் என்று சினிமா பாணியில் எதிர்பார்ப்பது மடத்தனம். நம் எழுத்து ஒருவரை கொஞ்சம் நம் கோணத்திலிருந்து சிந்திக்க வைத்தாலே மாற்றத்திற்கான விதை தூவப்பட்டு விட்டது என்று பொருள் கொள்ள முடியும். அதுவே பெரிய சாதனை தான்.&#8221; </p></blockquote>
<p>என்பது மிக நல்ல புரிதல். இதை எழுதுபவர் இன்னமும் வலைப்பதிவு வாசகர் தான் என்பதை எண்ணிப் பார்க்கையில், ஆச்சரியம் கூடுவதும் உண்மை; வாழ்த்துக்கள் இனியன்.</p>
<p>இதன் பின்னரும்,<br />
<blockquote>&#8220;நிறைய பேர் படிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் விரும்புவதை <strong>மட்டும்</strong> கொடுங்கள் அதில் உங்கள் விரூப்பத்தை இணைத்துக்கொள்ளுங்கள்&#8221;</p></blockquote>
<p>என்னும் முத்துலட்சுமியின் சமரசம், எடுபடவில்லை என்பதை வருத்தத்துடன் சொல்ல வேண்டி இருக்கிறது.</p>
<p>தாமதமாக உட்புகுந்து அடித்து ஆடி முதல் வருகையிலேயே <strong><span style="font-size:130%;">வெற்றி பெற்ற <a href="http://iniyan.wordpress.com/">இனியனுக்கு</a></span> </strong>என் வாழ்த்துக்கள்; சீக்கிரமே, உங்க பதிவிலும், உங்களின் ஆக்கங்களைக் காண ஆசை என்ற கோரிக்கையுடன்.. </p>
</p>
<p>[<a href="http://poonspakkangkal.blogspot.com/2007/03/blog-post_16.html"><strong>பொன்ஸ் பக்கங்களின் ஆண்டு விழாவை</strong> </a>ஒட்டி இந்தப் பட்டிமன்றத்தை நடத்துவதற்கு யோசனையும் இடமும் கொடுத்த சிந்தாநதிக்கு நன்றி <img src='http://s2.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> )  முதலிலேயே சொன்னால் எல்லாரும் ஓடிப் போயிடப் போறாங்களோன்னு போட்டி முடிந்த பிறகு... <img src='http://s2.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> ) ]</p>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/poonspakkangkal.wordpress.com/251/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/poonspakkangkal.wordpress.com/251/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/poonspakkangkal.wordpress.com/251/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/poonspakkangkal.wordpress.com/251/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/poonspakkangkal.wordpress.com/251/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/poonspakkangkal.wordpress.com/251/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/poonspakkangkal.wordpress.com/251/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/poonspakkangkal.wordpress.com/251/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/poonspakkangkal.wordpress.com/251/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/poonspakkangkal.wordpress.com/251/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/poonspakkangkal.wordpress.com/251/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/poonspakkangkal.wordpress.com/251/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/poonspakkangkal.wordpress.com/251/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/poonspakkangkal.wordpress.com/251/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/poonspakkangkal.wordpress.com/251/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/poonspakkangkal.wordpress.com/251/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=poonspakkangkal.wordpress.com&amp;blog=534143&amp;post=251&amp;subd=poonspakkangkal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://poonspakkangkal.wordpress.com/2007/03/22/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a4%e0%af%87/feed/</wfw:commentRss>
		<slash:comments>8</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1d87fd4312cf6e975e23f6e3a7d42ee5?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">பொன்ஸ்</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அப்படி எல்லாம் விட்ருவோமா?!</title>
		<link>http://poonspakkangkal.wordpress.com/2007/03/16/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae/</link>
		<comments>http://poonspakkangkal.wordpress.com/2007/03/16/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae/#comments</comments>
		<pubDate>Fri, 16 Mar 2007 10:40:00 +0000</pubDate>
		<dc:creator>பொன்ஸ்</dc:creator>
				<category><![CDATA[பதிவுகள்]]></category>
		<category><![CDATA[பாகச]]></category>

		<guid isPermaLink="false">http://poonspakkangkal.wordpress.com/2007/03/16/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae/</guid>
		<description><![CDATA[இதோ, அதோ என்று அந்தத் துயர சம்பவம் நடந்து இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. அதாங்க, நான் வலைபதியத் தொடங்கிய சம்பவம் தான் \:D/ வெட்டியாக, ரொம்ப வெட்டியாக, ஒரு வேலையும் இல்லாமல், அலுவலகத்தில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு சமயம், சென்னை நெட்வொர்க்கில் கதை படித்துக் கொண்டிருந்தவள், அப்படியே கைதவறி கைப்புள்ளயின் பதிவு உரலைத் தட்டிவிட்ட பொழுது தொடங்கியது இந்தக் கிறுக்கு. அந்தச் சமயம் கைப்ஸ் தன் தம்பியுடன் அடித்த கூத்துகளை விலாவாரியாக எழுதிக் கொண்டிருந்தார். இயல்பாகவே [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=poonspakkangkal.wordpress.com&amp;blog=534143&amp;post=250&amp;subd=poonspakkangkal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p>இதோ, அதோ என்று அந்தத் துயர சம்பவம் நடந்து இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. அதாங்க, நான் வலைபதியத் தொடங்கிய சம்பவம் தான் \:D/</p>
<p><img style="float:left;" alt="" src="http://bp1.blogger.com/_KIeKr9Ks4_M/RfpGMiQ3FvI/AAAAAAAAABs/i2x0yt-B3c4/s320/perplex2.jpg" /> வெட்டியாக, ரொம்ப வெட்டியாக, ஒரு வேலையும் இல்லாமல், அலுவலகத்தில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு சமயம், <a href="http://www.chennainetwork.com/">சென்னை நெட்வொர்க்கில் </a>கதை படித்துக் கொண்டிருந்தவள், அப்படியே கைதவறி கைப்புள்ளயின் பதிவு உரலைத் தட்டிவிட்ட பொழுது தொடங்கியது இந்தக் கிறுக்கு. அந்தச் சமயம் கைப்ஸ் தன் தம்பியுடன் அடித்த கூத்துகளை விலாவாரியாக எழுதிக் கொண்டிருந்தார். இயல்பாகவே நகைச்சுவை மிகவும் ரசிக்கும் நான் அதைப் படித்து, அதன்பின் அவருடைய அடுத்தடுத்த பதிவுகளுக்குள் விழுந்து எழுந்து, நாலு பதிவு விளையாட்டு உரலைக் கண்டுபிடித்தேன். விளையாட்டு கனஜோராக நடந்து கொண்டிருந்த அந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் அடுத்தவரின் லிங்குகளைக் கொடுத்துக் கொண்டே வந்ததால், ஒவ்வொரு பதிவராக பிடித்துப் படித்துக் கொண்டே வர எனக்கும் ஏதுவாகிற்று.</p>
<p>எப்படியோ துளசிதளத்தில் தரையிறங்கிய போது, அக்கா அப்போதைய இந்தியச் சுற்றுபயணம் பற்றி பதிவெழுதிக் கொண்டிருந்தார். அதைப் படித்துவிட்டு, சரி, &#8216;துளசி அக்கா, சென்னை வந்தால் நாம் கூட அவரைப் பார்க்கலாமே!&#8217; என்று நான் கேட்க, அவை &#8216;இரண்டு மாதம் முந்தைய பயண விவரம்&#8217; என்று அவர் சொல்ல, நல்ல பல்பு அது <img src='http://s2.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':-)' class='wp-smiley' />  [அப்பா! இந்த சொல்லையெல்லாம் பயன்படுத்தி எத்தனை நாளாச்சு! பதிவிலக்கியத்தில், இதை மட்டும் எப்படி விட்டோம்?! ]</p>
<p><img style="float:right;" src="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/perplex.jpg" />ஒவ்வொன்றாக தட்டி கடைசியாக பிளாக்கர் கணக்கு, தமிழில் எழுதுவது என்று எல்லாவற்றையும் பின்னூட்டங்கள் மூலமாக மட்டுமே கற்றேன். பிளாக்கரில் கணக்கு தொடங்கியாச்சு. வீட்டில் இருக்கும் பழைய கதைகளைப் பதிவிடலாம் என்று முடிவும் செய்தாச்சு. பு(ஆ)னைப்பெயர் கூட தேர்ந்தாச்சு. [பொன்ஸ் என்ற பெயர் வைத்த கதை தனிக்கதை.ஆரம்பத்தில் என்னுடைய பெயரை நெருங்கிய தோழியொருத்தி சுருக்கி அழைப்பது போல் <strong>poons </strong>என்று தான் வைத்திருந்தேன். அதைத் தமிழில் படித்த பினாத்தலார் பொன்ஸ் என்று மொழிபெயர்த்ததில், ரொம்ப பிடித்துப் போய் அப்படியே மாற்றியாச்சு. நடுவில் என் பாட்டி பெயரும் பொன்னம்மாவானதால், இந்தப் பெயரே விருப்பமானதாகிவிட்டது. நன்றி பினாத்தலார் ]. ஆனால், இத்தனை செய்தபின்னர் எழுதுவதில் ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது.</p>
<p><img style="float:left;" src="http://bp2.blogger.com/_KIeKr9Ks4_M/RfpoyyQ3F7I/AAAAAAAAADM/2i_6G5_24cY/s320/olif.gif" border="0" />என் <a href="http://poonspakkangkal.blogspot.com/2006/03/blog-post_16.html">முதல் பதிவை</a> இப்போது படித்தாலும் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். ரொம்ப ரொம்ப கொடுமையான பதிவு அது. அதை எழுதி முடித்து பப்ளிஷ் தட்டுவதா வேண்டாமா என்று வெகுநேரம் யோசித்து, ரொம்ப நேரம் கழித்து பிரசுரித்துவிட்டு ரியாக்ஷன்களுக்குப் பயந்து (ஏன் பயந்தேன் என்று இப்போதும் ஆச்சரியமாக இருக்கு), அப்படியே ஆறு மணி பஸ் பிடித்து வீட்டுக்கு ஓடி விட்டேன். மறுநாள் வரும் வழியெல்லாம் யோசித்துக் கொண்டே வந்தேன். &#8220;இதெல்லாம் தேவையா உனக்கு? எழுதுறவங்க எல்லாம் பெரியாளுங்க போலிருக்கு.. உனக்கெல்லாம் சரிபட்டு வருமா என்ன? பேசாம போய் அந்தப் பதிவை அழிச்சிடலாம்&#8221; என்று நினைத்து நான் வரவும், எனக்கு ரொம்ப பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. <b>முத்து(தமிழினி), ராசா, ஜீவா, கீதாக்கா, கார்த்திக் ஜெயந்த்</b> என்று நிறைய பேர் வந்து பின்னூட்டம் போட்டிருந்தார்கள்.. இவங்க பின்னூட்டங்கள் இல்லை என்றால், நீங்கள் ஒருவேளை இந்த அறுவையிலிருந்து தப்பியிருந்திருக்கலாம்.. ஏதோ உங்க கெட்ட காலம் <img src='http://s1.wp.com/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> )</p>
<p>ஆரம்பம் தான் அப்படி பயந்து பயந்து.. ஆனால் பாருங்க, அடுத்தடுத்த நாட்கள், கன்னாபின்னாவென்று கண்டதையும் எழுதியதில், மார்ச் மாதமே ஒன்பது பதிவுகள்! ஏப்ரல், மே &#8211; இல் ஏதோ கொஞ்சம் படிக்கிற வேலைகள் இருந்ததால் குறைந்தது, மீண்டும் ஜுன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் இரண்டு நாட்களுக்கு ஒரு பதிவு என்று விடுமுறை நாட்கள் தவிர்த்த மற்ற நேரங்கள் ரொம்ப பிஸியாக இருந்தது பிளாக்கர் <img src='http://s2.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>பதிவுலகத்தில் என் முதல் நண்பர் என்றால் <b>பாலபாரதி</b>யைத் தான் சொல்ல வேண்டும். &#8220;இப்படிப் பயந்து பயந்து எழுதுதே இந்தப் பொண்ணு&#8221; என்று நினைத்தோ என்னவோ, &#8220;அடிக்கடி டெம்ப்ளேட் மாத்தாதீங்க&#8221;, &#8220;கவிதை எழுதாதீங்களேன் ப்ளீஸ்!&#8221; என்று ஏதேதோ யோசனை சொல்லிக் கொண்டிருந்தார் மனிதர். நம்மதான் எதையுமே சொன்னால் கேட்கிற சாதி இல்லையே.. யார் என்ன சொன்னாலும் விடாது கவுஜ என்ன, டெம்ப்ளேட் என்ன என்று எதையெதையோ செய்து கொண்டே இருந்தேன். பதிவுகளில் முதலில் போனில் பேசியதும் பாலாவிடம் தான். எனக்கு யோசனை சொன்ன நேரம், கை உடைத்துக் கொண்டு வீட்டில் இருந்ததாக கேள்விப்பட்டபோது பாவம் என்று நான் போன் போட, &#8216;அவர் பேச, நான் கேட்க; நான் கேட்க, அவர் பேச&#8217; இப்படியாக எங்கள் முதல் போன் பேச்சு வார்த்தை ஒரு பக்கச் சார்பாகவே அமைந்தது. இப்ப வரைக்கும் பாலாவிடம் போன் போட்டு &#8216;ஹலோ&#8217; தவிர ஒரு வார்த்தை நீங்கள் அதிகமாக பேசிவிட்டால், நீங்கள் பெரியாள் தான் <img src='http://s2.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> ). யோசித்துப் பார்க்கும் போது, பா.க.சவின் விதை அப்போதே விழுந்துவிட்டதாகக் காண்கிறது. அது டார்மெண்டாக இருந்து கொஞ்சம் வளர்ந்து மூன்று இலை விடத் தான் ஆறுமாதங்கள் ஆகிவிட்டன (*)[அதுக்கப்புறம் அசுர வளர்ச்சிதான் :-j ]</p>
<p>அடுத்து குறிப்பிடத்தகுந்த வலைநண்பர் <b>சிபி</b>. கைப்புவைக் கலாய்க்க அப்போதெல்லாம் பார்த்திபன் என்ற வலைஞர் சும்மாவேனும் கலாய்த்துக் கொண்டிருப்பார். ஒரு முறை வ.வாசங்கத்தின் தங்கத் தலைவர் கைப்பு அண்ணனுக்காக, பார்த்திபன் பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு வெளியே வந்தால், சிபியிடமிருந்து ஒரு மடல். &#8220;நல்லா சொல்லி இருக்கீங்க பார்த்திபனுக்கு&#8221; என்று.. நான் எதார்த்தமாக, &#8220;நீங்க தான் பார்த்திபனா?&#8221; என்றேன். &#8220;அட! எப்படிக் கண்டுபிடிச்சீங்க?&#8221; என்று அவர் கேட்க, &#8220;அட, நெசமாவே நீங்கதானா?!&#8221;, &#8220;நானாத் தான் உளறிட்டனா?&#8221; என்று ஆரம்பித்தது எங்களின் வருத்தப்படாத நட்பு! அப்படியே வருத்தபடாத வாலிபர் சங்கம், கலாய்த்தல் திணை, பாலபாரதியைக் கலாய்ப்போர் சங்கம் என்று நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வீட்டுக்குள் சிபியின் மனைவியைக் கலாய்ப்போர் சங்கத்திலும் எனக்கு கொஞ்சமே கொஞ்சம் இடம் கொடுத்திருக்கிறார் மனிதர் <img src='http://s2.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>அலுவலக வேலைக்காக மதுரை செல்ல நேர்ந்தபோது, <b>தருமி</b> என்ற வலைபதிவர் பெயரை மட்டும் வைத்து அவருக்கு ஒரு மடல் தட்டி நாங்கள் செல்ல இருந்த கல்லூரியிலிருந்து கோயில் செல்ல வழிகேட்டுக் கொண்டிருந்தேன். வழி, ஆட்டோ சார்ஜ் முதற்கொண்டு சொன்னவர், தன்னுடைய செல்பேசி எண்ணையும் சேர்த்துக் கொடுத்திருந்தார். அப்போது ஜோசியம் பற்றி ஏதோ தொடர் எழுதிக் கொண்டிருந்த தருமியை, நான் பின்னூட்டங்களில் மட்டுமே படித்திருந்தேன். அதனால், போன் போட்டு, &#8220;நான் உங்க பதிவு படிச்சதே இல்லை&#8221; என்று சொல்வது கொஞ்சம் ஓவராக இருக்கும் என்று நினைத்து, அமைதியாக மதுரை போய், நல்ல பிள்ளையாய் இன்டர்வியூ எல்லாம் செய்து விட்டு திரும்பி வந்துவிட்டேன். அதன்பின்னர் கொஞ்ச நாள் கழிந்து, ஜோசியத் தொடர் முடிந்து என்னை மாதிரி பாமரர்களும் படிப்பது போல் தருமி ஏதோ எழுதப் போக, பின்னூட்டங்கள் மூலம் நட்பாகி, அப்படியே ஒரு ஆறு மாதம் கழித்துத் தன் பழைய மடல்களைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது, &#8220;நீங்க தானா அந்த மதுரைக்கு வழிகேட்டு வந்த ராஜாராம்?&#8221; என்றார்.. அந்தச் சமயத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்த மெயில் ஐடி அப்பா பெயரில் மட்டுமே இருக்கும், அதுவும் முழுதாக இருக்காது, அதனால் பேராசிரியர் குழம்பிப் போய்விட்டார் போலும் <img src='http://s2.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>அமெரிக்கா போய்ச் சேர்ந்து ஒரு வாரத்திற்குள் திடீரென்று ஒரு மடல், யாரோ ஒரு <b>கந்தசாமி</b>யிடமிருந்து. &#8220;எங்கூருக்கு வந்திருக்கீங்களா பொன்ஸ்? ஏதும் உதவி தேவைன்னா சொல்லுங்க.. &#8221; என்று.. யாருப்பா இது, என்று யோசித்தபடியே அவரது ப்ரோபைலைப் பார்த்தால், ஏ! யப்பா.. எத்தனை பதிவுகள்..இத்தனையும் பார்த்து இது இன்னார் என்று நான் புரிந்து கொள்ளவே நாளாகும் என்று நினைத்து சாதாரணமாக ஒரு பதில் அனுப்பி வைத்தேன். அதிலும், கனடாவில் உட்கார்ந்து கொண்டு ஒருவர், &#8220;எங்கூருக்கு வந்திருக்கீங்களா?&#8221; என்று என்னைக் கேட்டால், என்னவென்று நினைப்பது? வெட்டியாக வலைமேய்ந்து கொண்டிருந்ததால், அப்படியே கொஞ்சம் பிளாஷ்பேக் பதிவுகளாகப் படித்து, இந்த மதி கந்தசாமி புங்குடு தீவில் புட்பால் ஆடியவர் என்பதையும், ஆங்கிலப் படங்களுக்கு அழகாக விமர்சனம் எழுதுபவர் என்பதையும் கண்டு கொண்டேன். அப்படியே தேடிக் கொண்டே போனால், ஏதோ ஒரு பதிவில் இளவஞ்சி, &#8216;மதியக்கா&#8217; என்று விளித்து வாங்கிக் கட்டியதைப் படித்த பொழுது தான் புரிந்தது, &#8220;அட, இது அண்ணாச்சி இல்ல, யக்கோவ்!&#8221; என்று :-&#8221;. மதி கலாய்ப்போர் சங்கத்தில் சேர தொடர்பு கொள்ளவும்: பொன்ஸ் பக்கங்கள் <img src='http://s2.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>யார் இன்னார் என்று தெரியாமலே பேசத் தொடங்கி, எங்கோ எப்போதோ என்னுடன் படித்தவர்கள், வேலை பார்த்தவர்களின் நண்பர்கள் என்று சுற்றிச் சுற்றிக் கண்டுபிடித்திருக்கிறேன் இந்த ஒருவருடத்தில். என்ன, என்னுடைய நேரடி நண்பர்கள் யாரும் இன்னும் தமிழ் எழுத வரவில்லை. ஏன், தமிழை இலவச இணையத்தில் கொடுத்தால் கூட படிக்க மறுக்கிறார்கள்.. விரட்டி விரட்டித் தான் படிக்க வைக்க வேண்டியிருக்கிறது.. அந்தவகையில் கொஞ்சம் வருத்தம் தான் <img src='http://s0.wp.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' />  பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், பண்பலைகள் என்று எல்லாவற்றிற்கும் மாற்று ஊடகமாக வளர்ந்து நிற்கும் வலைப்பதிவுகள், புது வரவுகளுக்கு மிகவும் வசதியான களமாக இருக்கிறது. கண்டுபிடித்துப் படிப்பவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது கொஞ்சம் வருத்தம். அதிலும் இணைய வசதி அதிகம் உள்ள சென்னை போன்ற பெருநகரங்களில் படித்து வளர்ந்தவர்கள், தமிழை ஒரு பாடமாகக் கூட படித்தறியாத காரணத்தால், பதிவுகள் போன்ற ஊடகங்களுக்கு வந்தாலும் ஆங்கிலத்தை அல்லது, தமிங்கிலத்தை விரும்புகிறார்கள். தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விருப்பமில்லாத சிலரும் எழுதத் தயங்குகிறார்கள் என்பது இன்னுமொரு தனிக் கதை.</p>
<p>ஒரே வருடத்தில் நான் வெற்றிகரமாகச் சந்தித்து பயமுறுத்திவிட்ட பதிவர்களைப் பட்டியலிட எண்ணியிருந்தேன். ஆனால், நடந்துவிட்ட மூன்று நான்கு சென்னை சந்திப்புகளில் பார்த்தவர்களையும், பதிவு என்பது ஒரு அறிமுகக் களமாக இருந்தாலும், குடும்ப நண்பர்களாகவே பழகிவிட்ட பதிவு நட்புகளையும் எந்தப் பட்டியலில் சேர்ப்பது என்று புரியாததால், வித்தியாசமான முன்னுரையுடன் அறிமுகமான நண்பர்களைப் பற்றி மட்டுமே இந்தப் பதிவில் எழுதி இருக்கிறேன்.</p>
<p>அடுத்த வருடமாவது ஏதாச்சும் உருப்படியா எழுத முடியுமான்னு பார்க்கிறேன்..</p>
<p align="center"><img src="http://bp3.blogger.com/_KIeKr9Ks4_M/RfppnCQ3F-I/AAAAAAAAADk/ZfYNAh7I-LU/s320/feel_anim.gif" /></p>
<div align="center">
<p>என்ன பார்க்குறீங்க? ஆமாமாம்.. </div>
<div align="center"></div>
<div align="center"><span style="font-size:130%;">தொல்லை தொடர்கிறது </span></div>
<br /><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/categories/poonspakkangkal.wordpress.com/250/" /> <img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/tags/poonspakkangkal.wordpress.com/250/" /> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/poonspakkangkal.wordpress.com/250/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/poonspakkangkal.wordpress.com/250/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/poonspakkangkal.wordpress.com/250/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/poonspakkangkal.wordpress.com/250/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/poonspakkangkal.wordpress.com/250/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/poonspakkangkal.wordpress.com/250/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/poonspakkangkal.wordpress.com/250/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/poonspakkangkal.wordpress.com/250/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/poonspakkangkal.wordpress.com/250/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/poonspakkangkal.wordpress.com/250/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/poonspakkangkal.wordpress.com/250/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/poonspakkangkal.wordpress.com/250/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/poonspakkangkal.wordpress.com/250/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/poonspakkangkal.wordpress.com/250/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=poonspakkangkal.wordpress.com&amp;blog=534143&amp;post=250&amp;subd=poonspakkangkal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://poonspakkangkal.wordpress.com/2007/03/16/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%8b%e0%ae%ae/feed/</wfw:commentRss>
		<slash:comments>54</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/1d87fd4312cf6e975e23f6e3a7d42ee5?s=96&#38;d=identicon" medium="image">
			<media:title type="html">பொன்ஸ்</media:title>
		</media:content>

		<media:content url="http://bp1.blogger.com/_KIeKr9Ks4_M/RfpGMiQ3FvI/AAAAAAAAABs/i2x0yt-B3c4/s320/perplex2.jpg" medium="image" />

		<media:content url="http://i55.photobucket.com/albums/g150/poorna_r/perplex.jpg" medium="image" />

		<media:content url="http://bp2.blogger.com/_KIeKr9Ks4_M/RfpoyyQ3F7I/AAAAAAAAADM/2i_6G5_24cY/s320/olif.gif" medium="image" />

		<media:content url="http://bp3.blogger.com/_KIeKr9Ks4_M/RfppnCQ3F-I/AAAAAAAAADk/ZfYNAh7I-LU/s320/feel_anim.gif" medium="image" />
	</item>
	</channel>
</rss>
